22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

H1B visa கட்டண உயர்வுக்கு எதிராக வழக்கு

அமெரிக்காவில் பணிபுரிய செல்பவர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு டிரம்ப் விதித்துள்ள $100,000 கட்டணத்திற்கு எதிராக, பல்வேறு அமெரிக்க தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகளின் கூட்டமைப்பு, வெள்ளி அன்று சான் பிரான்ஸிஸ்கோ மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிரான முதல் வழக்கு இது தான். H-1B விசாவிற்கு இதுவரை $2,000 முதல் $5,000 வரை கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 21 முதல் இதை 1 லட்சம் டாலராக டிரம்ப் உயர்த்தியுள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற நிபுணர்களை பணியமர்த்துவதற்கு H-1B திட்டம் மிக அவசியம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நிறுவனங்களின் முக்கியப் பணியிடங்களை நிரப்பவும் உதவுகிறது.

”இது தடை செய்யப்பட்டால் மருத்துவமனைகள் மருத்துவ ஊழியர்களை இழக்கும். தேவாலயங்கள் போதகர்களை இழக்கும். வகுப்பறைகள் ஆசிரியர்களை இழக்கும்.

நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களில் முக்கிய பங்காற்றும் கண்டுபிடிப்பாளர்களை இழக்கும் அபாயம் உள்ளது” என்று டெமாக்ரசி ஃபார்வர்ட் ஃபவுண்டேஷன் மற்றும் ஜஸ்டிஸ் ஆக்ஷன் சென்டர் தெரிவித்துள்ளன. கட்டண உயர்வை உடனடியாகத் தடுத்து, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஸ்திரமான சூழலை மீட்டெடுக்குமாறு நீதிமன்றத்திடம் இந்த குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் H-1B கட்டணத்தை உயர்த்துவதால் டிரம்பின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று இந்த மனுவில் வாதிட்டுள்ளனர். ”தேசிய நலன்” என்ற அடிப்படையில் இதில் இருந்து விலக்கு பெற வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளதால், இது பாரபட்சமான நடவடிக்கைகளுக்கும், ஊழலுக்கும் வழி வகுக்கும் என்று கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *