22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பேச்சுவார்த்தையை நிறுத்திய டிரம்ப்..

இந்தியா உடனான புதிய வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. 50% வரி சர்ச்சையால் இந்தியாவுடனான வர்த்தக உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா, இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியை விதித்திருப்பதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்திய விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்ய மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

டிரம்பின் நிலைப்பாடு:
இந்தியாவில் இருந்து வரும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்,

“இந்த பிரச்சனை தீரும் வரை பேச்சுவார்த்தைகள் எதுவும் இருக்காது” என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு, 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்ட பிறகு வெளிவந்தது. இந்த புதிய உத்தரவு ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம், மொத்த வரி 50% ஆக உயர்கிறது. இந்த வரி, அமெரிக்க துறைமுகங்களுக்கு வரும் அனைத்து இந்திய பொருட்களுக்கும் பொருந்தும்.


இந்தியா – அமெரிக்கா உறவு


ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு “அசாதாரணமான அச்சுறுத்தல்” என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இதன் காரணமாகவே இந்த அவசர கால பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த வரி விதிப்பு, இரு நாடுகளின் உறவுகளில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது.


மோடியின் பதில்


டிரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவிற்கு இது கடினமான ஒன்றுதான். ஆனால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றார். புது டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், “எங்களுக்கு, எங்கள் விவசாயிகளின் நலன்கள்தான் மிக முக்கியம். விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது.இதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எனக்குத் தெரியும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

உலகளாவிய சந்தைகளுக்கு இந்திய விவசாய மற்றும் பால் துறைகளை திறக்க இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த துறைகள் திறக்கப்பட்டால், லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதே இதற்குக் காரணமாகும். மோடியின் கருத்து, இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *