ஓபன் ஏஐ-மைக்ரோசாஃப்ட் இடையே பேச்சுவார்த்தை..
ஓபன் ஏ.ஐ மற்றும் மைக்ரோசாஃப்ட் இடையே மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சாட்ஜிபிடி மென்பொருளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வது குறித்தே அந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு விட்டுத்தருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், 2030 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாஃப்ட் 1பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்திருந்தது. ஓபன் ஏஐ வெற்றி அடைந்ததும், பல பில்லியன் அமெரிக்க டாலர்களை மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணியாளர்களுக்கு கெடுபிடி அளித்து வரும் நிலையில், தங்கள் நிறுவனத்தில் பணம் சம்பாதிப்பதை இன்னும் அதிகரிக்க ஓபன் ஏஐ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தில் 13.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே முதலீடு செய்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். டெக் நிறுவனங்களில் ஜாம்பவான்களாக இருக்கும் இரு நிறுவனங்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கான திட்டங்களை பற்றி விவாதித்திருப்பது உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
