6% பங்குகளை விற்கும் அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்..
இந்தியா சிமென்ட்ஸில் உள்ள தனது பங்குகளில் 6.5% வரை அல்ட்ராடெக் சிமென்ட், விற்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா சிமென்ட்ஸைக் கையகப்படுத்திய அல்ட்ராடெக் நிறுவனம், “பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு” இணங்குவதற்காக இந்த விற்பனை நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது.
அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம், அதன் துணை நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட்டில் உள்ள தனது பங்குகளில் 6.5% வரை திறந்த சந்தை பரிவர்த்தனைகள் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக புதன்கிழமை அன்று அறிவித்தது.
ராய்ட்டர்ஸ் கணக்கீட்டின்படி, இதன் மதிப்பு 7.45 பில்லியன் ரூபாய் ($85.6 மில்லியன்) ஆகும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வர்த்தகம் முடிவில், இந்தியா சிமென்ட்ஸ் பங்கின் விலை 0.8% குறைந்து ₹370.25 ஆக இருந்தது. அதே சமயம், இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் நிறுவனத்தின் பங்குகள் ₹12,874-ல் எந்த மாற்றமும் இல்லாமல் நிறைவடைந்தன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்த அல்ட்ராடெக், இந்த விற்பனை “பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு” இணங்குவதற்காக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது.
சந்தை தரவுகளின்படி, ஜூன் இறுதியில், அல்ட்ராடெக் நிறுவனம் இந்தியா சிமென்ட்ஸில் 81.5% பங்குகளை வைத்துள்ளது, மீதமுள்ளவை பொது பங்குதாரர்களிடம் உள்ளன.
இந்தியாவில், சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின்படி, நிறுவனத்தின் கட்டுப்பாட்டு பங்குதாரர்களான “புரோமோட்டர்கள்”, 75% வரையிலான பங்குகளை மட்டுமே வைத்திருக்க முடியும். இந்த சட்ட விதிகளுக்கு இணங்க, அல்ட்ராடெக் தனது பங்குகளை விற்பனை செய்கிறது.
