22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

ஐ.டி நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தம் AI தொழில்நுட்பம்

ஏ.ஐ தொழில்நுட்பம், IT சேவைகளுக்கான வாய்ப்புகளை குறைப்பதற்கு பதிலாக விரிவாக்கத்தை உருவாக்குகிறது என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன், கூறியுள்ளார்.

CNBC-TV18 உடன் பேசிய கிருத்திவாசன், AI தலைமையிலான வேலை இழப்பு குறித்த அச்சங்களை நிராகரித்து, “பீதி அடையத் தேவையில்லை. ஒவ்வொரு முறையும் இத்தகைய தொழில்நுட்ப இடையூறு ஏற்படும்போது, வேலை வாய்ப்புகள் விரிவடைகிறது” என்று கூறினார்.

பாரம்பரிய IT சேவைப் பணிகளில் AI, 20-30% உற்பத்தித்திறன் ஆதாயங்களைக் கொண்டு வரக்கூடும் என்றாலும், நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வாய்ப்பில்லை என்றும், மாறாக அவை தேங்கியுள்ள பணிகளை விரைவாக முடிக்கவும், தத்தெடுப்பை, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கும் இதைப் பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.

பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் வருவாய் வளர்ச்சியை குறைப்பதுது குறித்த கவலைகளை நிவர்த்தி செய்த கிருத்திவாசன், தொழிலார்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்ட பில்லிங் மாடலை விட, விளைவுகள் அடிப்படையிலான விலை நிர்ணய மாதிரிகளை நோக்கி தொழில்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இது ஒரு சவால் அல்ல என்றும், ஒட்டுமொத்த தேவை விரிவடையும், சுருங்காது என்று அவர் கூறினார்.

“மொத்த வருவாய் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார். மேலும் AI வாய்ப்புகளை நீக்குவதற்குப் பதிலாக புதிய வகை வேலைகளையும், பயன்பாடுகளையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய வாடிக்கையாளர்களுடன் TCS ஏற்கனவே மேம்பட்ட AI பயன்பாட்டு நிகழ்வுகளை செயல்படுத்தி வருவதாகவும் கிருதிவாசன் தெரிவித்தார். “உதாரணமாக, எங்கள் வாடிக்கையாளர்களில் சிலருக்கு, AI ஐப் பயன்படுத்தி புதிய மருந்துகளை கண்டுபிடிக்க நாங்கள் உதவி செய்கிறோம் மற்றும் AI ஐப் பயன்படுத்தி கிளெய்ம்ஸ் செயல்முறை ஆட்டோமேஷனை முன்னெடுக்கிறோம்” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் AI தரவு மையத் தேவை கூர்மையாக அதிகரிக்கும் என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் “குறைந்தபட்சம் 10 ஜிகாவாட் திறன்” நாட்டிற்குத் தேவைப்படும் என்றும், தற்போதைய உறுதியான திறன் சுமார் ஐந்து ஜிகாவாட் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *