இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்
இன்டஸ்இண்ட் வங்கி, ஜகதீப் மல்லாரெட்டியை ஏப்ரல் 9 முதல் தனது நுகர்வோர் வங்கிப் பிரிவின் தலைவராக நியமித்துள்ளதாக வியாழக்கிழமை அன்று அறிவித்தது. அவர் வங்கியின் மூத்த நிர்வாகப் பணியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மல்லாரெட்டிக்கு நிதிச் சேவைத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளது. சில்லறை வங்கிச் சேவை, கடன் வழங்குதல், கடன் தகுதி, செயல்பாடுகள் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றில் அவருக்கு அனுபவம் உண்டு. இன்டஸ்இண்ட் வங்கியில் சேருவதற்கு முன்பு, அவர் பிரமல் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் தலைமை வணிக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
முன்னதாக, அவர் ஆக்சிஸ் வங்கியில் சில்லறை கடன் வழங்கும் பிரிவுத் தலைவர் உட்பட பல மூத்த தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் பிற நிறுவனங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
வங்கியின் நுகர்வோர் வங்கிப் பிரிவின் தலைவராக இருந்த சௌமித்ரா சென், இந்த மாதம் ஓய்வு பெற உள்ளார்.
இன்டஸ்இண்ட் வங்கி பங்கு விலை நேற்று காலை ரூ.818இல் தொடங்கி, வர்த்தகம் முடியும் போது ரூ.830ஆக, 15.45% அதிகரித்தது.
