சிகரெட் விலைகளை உயர்த்திய ஐ.டி.சி நிறுவனம்
பிப்ரவரி 1, 2026 அன்று கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்ததால், இதை ஈடு செய்ய சிகரெட் உற்பத்தியாளர்கள் விலைகளை உயர்த்தத் தொடங்கியுள்ளனர் என்று நோமுரா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐடிசி நிறுவனம் அதன் கோல்ட் ஃப்ளேக் மற்றும் கிளாசிக் உள்ளிட்ட அதன் பிரீமியம் பிராண்டுகளுக்கான விலைகளை 30% வரை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் மேலும் விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதன் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் (ஈபிட்) வளர்ச்சி எதிர்பார்த்ததை விட 20 சதவீதம் வரை சரிவை எதிர்கொள்ளக்கூடும் என்று நோமுரா எச்சரித்தது. வரி உயர்வின் குறிப்பிடத்தக்க அளவைக் கருத்தில் கொண்டு, லாபத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க ஐடிசி விலை உயர்வுகளை படிப்படியாக செயல்படுத்தக்கூடும் என்று இந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
ஐ.டி.சி பங்குகளை குறையுங்கள் என்று பரிந்துரை செய்துள்ளா நேமுரா அதன் இலக்கு விலை ₹318 ஆக நிர்ணயம் செய்துள்ளது. நிதியாண்டு 2027-28 வரை ஐ.டி.சியின் பங்கு ஒன்றுக்கான வருவாய் (EPS) அளவில் மாற்றம் எதுவும் இல்லாமல், ஒரே அளவில் தொடரும் என்று கணித்துள்ளது.
விலை உயர்வினால் ஏற்படும் விற்பனை சரிவை சீர் செய்ய, 10 சிகரெட்களுக்கு ₹94 விலையில் சிறிய 64 மிமீ கோல்ட் ஃப்ளேக் டீலக்ஸ் சிகரெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வழக்கமான அளவு (69மிமீ) கொண்ட கோல்ட் ஃப்ளேக் வகைகளில் ஒன்றின் மீது 32 சதவீத விலை உயர்வையும் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 10 சிகரெட்களுக்கான விலை ₹95 இல் இருந்து ₹125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டீலக்ஸ் (64மிமீ) அளவிலான கோல்ட் ஃப்ளேக் சூப்பர் ஸ்டார் பிராண்டின் விலை உயர்வு எந்த அளவிற்கு இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. தற்போது 10 சிகரெட்களுக்கு ₹59 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காட்ஃப்ரே பிலிப்ஸ் போன்ற போட்டியாளர்கள் கிங்ஸ்-ஸ்லிம்ஸ் பிரிவில் அதன் ஸ்டெல்லர் ஷிப்ட் பிராண்டிற்கான விலையை 90 சதவீதம் அதிகரித்து ஒரு சிகரெட்டுக்கு ₹19 ஆக உயர்த்தியுள்ளது ஒப்பிடத்தக்கது.
