Latest: வெளிநாட்டு சக்திகளை இந்தியா சார்ந்திருத்தல்: எரிபொருள், தங்கம், பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடிIndia's Strategic Dependency on Foreign Powers: Fuel, Gold, Defence and the Middle East Crisisவிவசாய இயந்திர வணிகத்திலிருந்து வெளியேறும் மிட்சுபிஷி மஹிந்திராஈரான் போரினால் சூரத் ஜவுளி துறைக்கு கடும் பாதிப்புகள்ஈரான் போரினால் நடுக்கடலில் சிக்கியுள்ள 70,000 டன்கள் பாஸ்மதி அரிசிஅமெரிக்காவில் ரத்தப் புற்று நோய் மருந்தை அறிமுகப்படுத்தும் நேட்கோவளர்ச்சியில் கவனம் குவிக்கும் இன்டஸ்இண்ட் வங்கிஹைட்ரஜன் லாரிகளை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்தங்கம் விலை 5 ஆண்டுகளில் $10,000 ஆக உயரும் - ஜெஃபரீஸ் நிறுவனம்ஈரான் போரினால் பங்கு சந்தையில் ரூ.6.35 லட்சம் கோடி இழப்பு
Latest: வெளிநாட்டு சக்திகளை இந்தியா சார்ந்திருத்தல்: எரிபொருள், தங்கம், பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடிIndia's Strategic Dependency on Foreign Powers: Fuel, Gold, Defence and the Middle East Crisisவிவசாய இயந்திர வணிகத்திலிருந்து வெளியேறும் மிட்சுபிஷி மஹிந்திராஈரான் போரினால் சூரத் ஜவுளி துறைக்கு கடும் பாதிப்புகள்ஈரான் போரினால் நடுக்கடலில் சிக்கியுள்ள 70,000 டன்கள் பாஸ்மதி அரிசிஅமெரிக்காவில் ரத்தப் புற்று நோய் மருந்தை அறிமுகப்படுத்தும் நேட்கோவளர்ச்சியில் கவனம் குவிக்கும் இன்டஸ்இண்ட் வங்கிஹைட்ரஜன் லாரிகளை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்தங்கம் விலை 5 ஆண்டுகளில் $10,000 ஆக உயரும் - ஜெஃபரீஸ் நிறுவனம்ஈரான் போரினால் பங்கு சந்தையில் ரூ.6.35 லட்சம் கோடி இழப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை..

இந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது டாடா குழுமம். இந்த குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தித்துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செமிகண்டக்டர்கள், மின்சார வாகன உற்பத்தி, மற்றும் அது சார்ந்த துறைகளில் இந்த 5 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த குழுமத்தின் தலைவர் சந்திர சேகரன் கூறியுள்ளார். வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்டுவதற்கு உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது கட்டாயம் என்று சந்திர சேகரன் கூறியுள்ளார். டாடா குழுமத்தின் புதிய நிறுவனங்களான செமி கண்டக்டர்களுக்கு என பிரத்யேக ஆலை அசாமில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்சார வாகனங்கள் மற்றும் அது சார்ந்த பேட்டரி உற்பத்தி நிலையங்களையும் டாடா குழுமம் தயாரித்து வருகிறது. இந்த வேலைவாய்ப்புகள் உருவாவதால் சிறு குறு நிறுவனங்கள் என்ற கட்டமைப்பே உருவாகும் என்றும் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சந்திர சேகரன், செமிகண்டக்டர்கள் மூலம் மறைமுகமாக பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்தியாவில் இன்னும் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுவதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *