Latest:
புதிய பணியமர்த்தல் திட்டத்தைத் தொடங்கும் டி.சி.எஸ்மார்ச்சில் அதிக தொகையை பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை அறிமுகப்படுத்தும் ஐ.டி.சி நிறுவனம்தென் கொரியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விப்ரோ நிறுவனம்HDFC Bank's Turbulent Week: From Chairman's Abrupt Exit to RBI Reassurance – What the Future HoldsHDFC வங்கியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் ?ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கும் இந்திய நிறுவனங்கள்சவுத் இந்தியன் வங்கியின் பகுதி நேர தலைவராக ஜோஸ் ஜோசப் கட்டூர் நியமனம்சேவைக் கட்டணத்தை உயர்த்திய ஸொமேட்டோ நிறுவனம்உணவு வணிகத் துறையில் தொடரப் போவதாக அறிவித்த HULபுதிய பணியமர்த்தல் திட்டத்தைத் தொடங்கும் டி.சி.எஸ்மார்ச்சில் அதிக தொகையை பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை அறிமுகப்படுத்தும் ஐ.டி.சி நிறுவனம்தென் கொரியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விப்ரோ நிறுவனம்HDFC Bank's Turbulent Week: From Chairman's Abrupt Exit to RBI Reassurance – What the Future HoldsHDFC வங்கியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் ?ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கும் இந்திய நிறுவனங்கள்சவுத் இந்தியன் வங்கியின் பகுதி நேர தலைவராக ஜோஸ் ஜோசப் கட்டூர் நியமனம்சேவைக் கட்டணத்தை உயர்த்திய ஸொமேட்டோ நிறுவனம்உணவு வணிகத் துறையில் தொடரப் போவதாக அறிவித்த HUL
Latest:
புதிய பணியமர்த்தல் திட்டத்தைத் தொடங்கும் டி.சி.எஸ்மார்ச்சில் அதிக தொகையை பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை அறிமுகப்படுத்தும் ஐ.டி.சி நிறுவனம்தென் கொரியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விப்ரோ நிறுவனம்HDFC Bank's Turbulent Week: From Chairman's Abrupt Exit to RBI Reassurance – What the Future HoldsHDFC வங்கியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் ?ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கும் இந்திய நிறுவனங்கள்சவுத் இந்தியன் வங்கியின் பகுதி நேர தலைவராக ஜோஸ் ஜோசப் கட்டூர் நியமனம்சேவைக் கட்டணத்தை உயர்த்திய ஸொமேட்டோ நிறுவனம்உணவு வணிகத் துறையில் தொடரப் போவதாக அறிவித்த HULபுதிய பணியமர்த்தல் திட்டத்தைத் தொடங்கும் டி.சி.எஸ்மார்ச்சில் அதிக தொகையை பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை அறிமுகப்படுத்தும் ஐ.டி.சி நிறுவனம்தென் கொரியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விப்ரோ நிறுவனம்HDFC Bank's Turbulent Week: From Chairman's Abrupt Exit to RBI Reassurance – What the Future HoldsHDFC வங்கியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் ?ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கும் இந்திய நிறுவனங்கள்சவுத் இந்தியன் வங்கியின் பகுதி நேர தலைவராக ஜோஸ் ஜோசப் கட்டூர் நியமனம்சேவைக் கட்டணத்தை உயர்த்திய ஸொமேட்டோ நிறுவனம்உணவு வணிகத் துறையில் தொடரப் போவதாக அறிவித்த HUL
உள்நாட்டு செய்திகள்

வேதாந்தா குழுமத்தலைவர் நெகிழ்ச்சி..!!

“ஈவுத்தொகை (dividend) என் ரத்தத்திலேயே ஊறியுள்ளது,” என்று வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். குழுமத்தை பல்வேறு தனி நிறுவனங்களாக பிரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், பிரிப்புக்குப் பிறகும், பல்வேறு தொழில்களில், திட்டமிடப்பட்ட 2,000 கோடி டாலர் விரிவாக்கத்தைத் தொடர்வதுடன், பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

உலோகங்கள் முதல் எண்ணெய் வரையிலான தொழில்களைக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தை தனித்தனி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிப்பது, கவனத்தைக் கூர்மைப்படுத்தவும், மதிப்பை வெளிக்கொணரவும், அதன் மூலதனச் செலவுகளை தடை செய்யாத வகையில் பண வருவாயைத் தொடரச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வேதாந்தா நிறுவனத்தை ஐந்து வெவ்வேறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கும் திட்டத்திற்கு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) செவ்வாயன்று ஒப்புதல் அளித்தது. இந்த பிரிப்புக்குப் பிறகு, அடிப்படை உலோகங்கள் வணிகம் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இருக்கும். அதே நேரத்தில் வேதாந்தா அலுமினியம், தல்வண்டி சபோ பவர், வேதாந்தா ஸ்டீல் அண்ட் அயர்ன் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தைக் கொண்ட மால்கோ எனர்ஜி ஆகியவை மற்ற நான்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக இருக்கும்.

“ஈவுத்தொகை என் ரத்தத்திலேயே ஊறியுள்ளது,” என்று அவர் கூறினார். “என்ன நடந்தாலும், எங்கள் நிறுவனங்களால் எப்போதும் ஈவுத்தொகை வழங்கப்படும்” என்றார்.

அதிக ஈவுத்தொகை வழங்கும் இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக வேதாந்தா தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பங்குதாரர்களின் வருமானத்தில் ஈவுத்தொகை வருமானம் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளது.

2025-26 நிதியாண்டில் ஒரு பங்குக்கு ரூ. 7 ஆக முதல் இடைக்கால ஈவுத்தொகையும் (மொத்தம் ரூ. 2,737 கோடி) மற்றும் ஒரு பங்குக்கு ரூ. 16 என இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகை (மொத்தம் ரூ. 6,256 கோடி) ஆகியவை அளிக்கப்பட உள்ளன.

வேதாந்தா 2023-24 நிதியாண்டில் பல இடைக்கால ஈவுத்தொகைகள் மூலம் ஒரு பங்குக்கு மொத்தம் ரூ. 29.50 வழங்கியது. மேலும் 2024-25 நிதியாண்டில் மொத்த ஈவுத்தொகை விநியோகம் ஒரு பங்குக்கு சுமார் ரூ. 46 ஆக இருந்தது.

One thought on “வேதாந்தா குழுமத்தலைவர் நெகிழ்ச்சி..!!

  • RAMAPRASAD RAJAGURU

    Wonderful information thanks.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *