Latest:
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronics
Latest:
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronics
சர்வதேச செய்திகள்

இந்தியாவுக்கு வருகிறதா வெனிசுலா கச்சா எண்ணெய் ?

அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான சமீபத்திய மோதலின் ஊடாக, வெனிசுலாவின் கச்சா எண்ணெய் படிப்படியாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகும் என்று ரைஸ்டாட் எனர்ஜி கூறியுள்ளது.

ரைஸ்டாட் எனர்ஜியின் மூத்த துணைத் தலைவர் பங்கஜ் ஸ்ரீவாஸ்தவா, இந்த மோதல் அமெரிக்க வளைகுடா கடற்கரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீண்டகால உத்தியை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார், அவை வெனிசுலாவின் கனமான புளிப்பு ரக கச்சா எண்ணெயை சுத்தீகரிக்க வடிவமைக்கப்பட்டவை. மத்திய கிழக்கு பகுதிகளை ஒப்பிடும் போது, அமெரிக்காவிற்கு அருகே உள்ள வெனிசுலாவின் ஏற்றுமதிகளில் இருந்து பயனடையவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்கா, மத்திய கிழக்கு உயர்-சல்பர் எரிபொருள் எண்ணெயை (HSFO) நம்பியிருப்பதைக் குறைக்கிறது.

“வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவை நோக்கி மெதுவாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் OPEC+ தற்காப்புடன் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

2025 ஆம் ஆண்டில் வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்தி, ஒரு நாளைக்கு 900,000 பீப்பாய்களை (b/d) தாண்டியதால், எதிர்பார்க்கப்படும் அமெரிக்க மூலதன வரவு மற்றும் அதைத் தொடர்ந்து தேவை அதிகரிப்பு ஆகியவற்றுடன், தினமும் 12 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி திறன் கொண்ட வெனிசுலா சுத்திகரிப்புத் துறை, அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள் ஏற்றுமதிகளை அதிகரிக்கத் தொடங்கும் என்று ரைஸ்டாட் எனர்ஜி எதிர்பார்ப்பதாக ஸ்ரீவஸ்தவா கூறினார்.

“தற்போதைய உற்பத்தி விகிதங்கள், அடிக்கடி ஏற்படும் மின் தடைகள், திட்டமிடப்படாத செயலிழப்புகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் முறையற்ற பராமரிப்பு ஆகியவற்றால் தடைபடுகின்றன. வழக்கமான 60 சதவீத டர்ன்-டவுன் விகிதம் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சாத்தியமானதாக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சூழல் சீனாவிற்கு அதிக இழப்புகளை ஏற்படுத்த உள்ளது. பெரிய அளவிலான தள்ளுபடி விலையை இறக்குமதி செய்யப்பட்ட வெனிசுலா கச்சா எண்ணெய் இழப்பு அதன் ‘டீபாட்’ சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வெனிசூலாவிற்கு சீனா அளித்துள்ள சுமார் $1,200 கோடி எண்ணெய் தொடர்பான கடன்களும் ஆபத்தில் உள்ளது.

“மாறாக, இந்தியா ஒரு வெற்றியாளராக தனித்து நிற்கிறது. அதன் சிக்கலான சுத்திகரிப்பு நிலையங்கள், வெனிசுலாவின் கனமான புளிப்பு ரக தரங்களுக்கு நன்கு பொருந்துகின்றன மற்றும் தடைகள் தளர்த்தப்படும்போது வெனிசுலா கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது,” என்று ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *