டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் அதிரடி திட்டம்
பிரபலமான எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோய் மருந்தான செமக்ளூடைட்டின் பொதுவான பதிப்பை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் லபராட்டரீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த,
உள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
“வாய்வழி மற்றும் ஊசி மருந்துகள் உட்பட அனைத்து வடிவங்களையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அவை அனைத்தும் ஆரம்ப வெளியீட்டில் இருக்கும்” என்று பிராண்டட் சந்தைகள், இந்தியா மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.வி. ரமணா ஒரு நேர்காணலில் தெரிவித்தார். “அனைத்து மருந்துகளுக்கும் குறைந்த அளவில் விலை நிர்ணயம் செய்யப்படும்” என்று கூறினார்.
ஓசெம்பிக் மற்றும் வீகோவி போன்ற பிராண்டுகளின் கீழ் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் உருவாக்கி, விற்கும் செமக்ளூடைடு மருந்தின் காப்புரிமை மார்ச் 21 அன்று முடிவடைகிறது. இதனால் இதர நிறுவனங்கள் இந்த மருந்தின் பொதுவான பதிப்புகளை விற்பனை செய்ய வழி பிறந்துள்ளது.
பொதுவான பதிப்புகள் மாதத்திற்கு ₹4,000-5,000 விலையில் இருக்கலாம் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது மருந்தளவைப் பொறுத்து ₹8,800 முதல் ₹16,000 வரை இருக்கும் நோவோ நோர்டிஸ்க் பிராண்டுகளின் விலையில் கிட்டத்தட்ட பாதி அளவு தான்.
அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்தே தேவையை பூர்த்தி செய்ய போதுமான உற்பத்தி திறன் மற்றும் விநியோகத்தை டாக்டர் ரெட்டீஸ் உறுதி செய்துள்ளது என்று ரமணா கூறினார்.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இந்நிறுவனம் முதலில் நீரிழிவு நோய் மருந்து விற்பனையை தொடங்கும் என்றும், பின்னர் உடல் பருமன் உட்பட பிற வடிவங்களுக்கு விரிவடையும் என்று அவர் கூறினார்.
10 கோடி நீரிழிவு நோயாளிகள் மற்றும் 13 கோடி நீரிழிவுக்கு முந்தைய கட்ட நோயாளிகளைக் கொண்ட இந்தியா, இதற்கான மிகப்பெரிய சந்தையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு நோயைத் தாண்டி, அதிகரித்து வரும் உடல் பருமன் அளவுகள் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகின்றன. இருப்பினும் இந்த நிலை சரியாகக் கண்டறியப்படாமலும், போதுமான சிகிச்சை அளிக்கப்படாமலும் உள்ளது என்று ரமணா கூறினார்.
