ஐஸ்கிரீம் கம்பெனியின் புது அப்டேட்!!!
இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் மற்றும் உறைந்த இனிப்பு நிறுவனமான குவாலிட்டி வால்ஸ் (இந்தியா) லிமிடெட் (KWIL), அதன் தாய் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL)-இலிருந்து பிரிய உள்ள நிலையில், அதன் இயக்குநர்கள் குழுவை உருவாக்கியுள்ளது.
இரண்டு நிர்வாக இயக்குநர்கள் மற்றும் நான்கு சுயாதீன இயக்குநர்கள் மற்றும் ஒரு இயக்குநர் உட்பட மொத்தம் ஏழு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் பிரேம்ராஜ்கா நிர்வாக இயக்குநராகவும், சித்ராங்க் கோயல் துணை நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நுகர்வோர் பொருட்கள் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.
அதன் சுயாதீன இயக்குநர்களில் ரவி பிஷாரடி, மாதவன் ஹரிஹரன், ஜே.வி. ராமன் மற்றும் சுக்லா வாசன் ஆகியோர் அடங்குவர். ரித்தேஷ் திவாரி, நிர்வாக அதிகாரமற்ற இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது யூனிலீவர் பிஎல்சியில் எம் & ஏ, நிதித்துறை மற்றும் புதிய திட்டங்களுக்கான உலகளாவிய தலைவராக பதவி வகிக்கிறார்.
டிசம்பர் 1 ஆம் தேதி KWIL, HUL-இலிருந்து பிரிக்கப்பட்டு ஒரு தனி நிறுவனமாக நிறுவப்படும். KWIL வலுவான பாரம்பரியம் மற்றும் விரிவான விநியோக சங்கலி கொண்ட, இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றாகும் என்று HUL கூறியுள்ளது.
ஐஸ்கிரீம் சந்தை இரட்டை இலக்கங்களில் வளர்ந்து வருவதாகவும், சிற்றுண்டிகளுக்கான சந்தையால் ஆதரிக்கப்படுவதாகவும் KWIL தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஐஸ்கிரீம் சந்தை $260 கோடி மதிப்புடையதாக உள்ளது. இது 11 சதவீத வளர்ச்சியடையும் என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் $440 கோடியாக விரிவடையும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
நாட்டில் ஏற்கனவே அதன் மூன்று உலகளாவிய பிராண்டுகள் இருப்பதாகவும், பென் & ஜெர்ரி, வியன்னாட்டா மற்றும் யாசோ உள்ளிட்ட மூன்று உலகளாவிய பிராண்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் KWIL கூறியுள்ளது.
