TCS-க்கு சம்மன் ??? ஏன்??
ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், தொடர்ச்சியான பணிநீக்கங்களை முன்னெடுத்து வருகிறது. இது பற்றி நேசன்ட் தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கம் (NITES) தாக்கல் செய்த புகார்கள் தொடர்பாக, புனேவின் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இது பற்றிய விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த பல மாதங்களாக டி.சி.எஸ் நிறுவனம், புனேவில் கிட்டத்தட்ட 2,500 நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாக, NITES நிறுவனம் குற்றம் சாட்டி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் புகார் அளித்திருந்தது.
“கடந்த பல மாதங்களாக, பல்வேறு இடங்களில் உள்ள TCS ஊழியர்களிடமிருந்து திடீர் பணிநீக்கங்கள், கட்டாய ராஜினாமாக்கள், சட்டப்பூர்வ நிலுவைத் தொகை மறுப்பு மற்றும் கட்டாய வேலை நடைமுறைகள் தொடர்பாக NITES ஏராளமான புகார்களைப் பெற்றுள்ளது. புகார்கள் பற்றிய ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் முறையான புகார்களை தாக்கல் செய்வதில் NITES உதவியது,” என்று NITES அமைப்பு நவம்பர் 15 அன்று ஒரு எக்ஸ் பதிவில் கூறியது.
அக்டோபரில் இந்நிறுவனத்தின் Q2FY26 வருவாய் அறிக்கை வெளியீட்டின் போது, மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக TCS இதுவரை ஒரு சதவீதம் பேரை, அதாவது 6,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னுமல் தெரிவித்திருந்தார்.
50,000 முதல் 80,000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் பணி நீக்கங்கள் இருக்கலாம் என்ற பரவலான அச்சத்தின் காரணமாக, உண்மையான பணிநீக்கங்களின் அளவு குறித்து கேட்டபோது, குன்னுமல், இந்த எண்களில் பல உண்மைக்கு மாறானவை, மிகைப்படுத்தப்பட்டவை என்றும், இதை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இரண்டாம் காலாண்டில், டி.சி.எஸின் ஊழியர்களின் எண்ணிக்கை, நிகர அளவில் 19,755 அளவுக்கு சரிந்தது.

Guys I have ordered book in money peachy at 9th, still I didn’t receive my book. Your contact number not working.
So please tell me my order status.
karthikmztech@gmail.com
This is the email I have used for order
Sir, Your order is expected to be delivered by tomorrow, by the end of the day.