ஆரக்கிளுடன் கூட்டு முயற்சியை விரிவுபடுத்தும் டி.சி.எஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் ஆரக்கிள் ஏஐ டேடா பிளாட்ஃபார்ம் லேப் மற்றும் செண்டர் ஃபார் எக்ஸ்செலென்ஸ் ஆகியவற்றைத் தொடங்குவதன் மூலம் ஆரக்கிள் உடனான தனது கூட்டுறவை விரிவுபடுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிறுவன மாற்றத்தின் அடுத்த கட்டத்தை வடிவமைக்க நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த புதிய மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் மேலும் நான்கு நகரங்களில் இத்தகைய ஆரக்கிள் ஏஐ டேடா பிளாட்ஃபார்ம் லேப் மற்றும் செண்டர் ஃபார் எக்ஸ்செலென்ஸ்களை நிறுவவும் TCS திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவின் டெல்டா பார்க் லார்ட்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள இந்த மையம், சிதறிய தரவு அமைப்புகள், மெதுவான பகுப்பாய்வு சுழற்சிகள், வரையறுக்கப்பட்ட AI விரிவாக்கத் திறன் மற்றும் செயல்பாட்டுத் திறமையின்மை போன்ற AI பயன்பாட்டில் உள்ள பொதுவான தடைகளைத் தகர்க்க வாடிக்கையாளர்களுக்கு உதவும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய கட்டமைப்புகள், துறை சார்ந்த தீர்வுகள் மற்றும் வேகத்தை அதிகரிக்கும் கருவிகளைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் தரவைச் செயல்படக்கூடிய நுண்ணறிவாக மாற்றவும், AI சார்ந்த தானியக்கச் செயல்பாடுகளைப் பெரிய அளவில் செயல்படுத்தவும் TCS வாடிக்கையாளர்களுக்கு உதவும்.
ஆரக்கிள் ஏஐ டேடா பிளாட்ஃபார்ம், அதன் தரவை AI பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றுகிறது. மேலும், ஆரக்கிள் கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர், ஆரக்கிள் அட்டானமஸ் ஏஐ டேடா பேஸ் மற்றும் OCI எண்டெர்பிரைஸ் AI ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திறன்களைப் பயன்படுத்தி, ஏஜென்டிக் செயலிகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் இது உதவுகிறது.
இது குறித்து ஆரக்கிள் இந்தியாவின் தொழில்நுட்பப் பிரிவு கூட்டணிகள் மற்றும் சேனல்ஸ் தலைவர் அரவிந்த் மெஹ்ரா கூறுகையில், “பாதுகாப்பான, ஒருங்கிணைந்த தரவு அடித்தளம் மற்றும் ஒருங்கிணைந்த AI திறன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரக்கிள் ஏஐ டேடா பிளாட்ஃபார்ம் லேப் மற்றும் CoE-ஐ நிறுவுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் AI-ஐ விரைவாகப் பயன்படுத்த TCS உதவுகிறது. வணிகம் முழுவதும் AI-ஐ எளிமையாக்கவும், விரிவுபடுத்தவும் மற்றும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் ஆரக்கிள் ஏஐ டேடா பிளாட்ஃபார்ம் லேபைப் பயன்படுத்துவதன் மூலம், செயல்படக்கூடிய நுண்ணறிவு முதல் புத்திசாலித்தனமான தானியக்கம் வரை, தரவை உண்மையான வணிக முடிவுகளாக மாற்ற நாங்கள் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறோம்,” என்று தெரிவித்தார்.
