இரட்டை இலக்க விகித லாபத்தை எதிர்நோக்கும் டைட்டன் நிறுவனம்
டைட்டன் நிறுவனம், நடப்பு காலாண்டில் லாபத்தில் இரட்டை இலக்க சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது என்று இந்த நகைக்கடை நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை அதிகரித்தும், அதற்கான தேவை வலுவக இருப்பதால் இது சாத்தியமாகும் என தெரிவித்தார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், விலைகள் உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தில் நுகர்வோர் அதிக அளவில் முதலீடு செய்வதால், தனிஷ்க், காரட்லேன் போன்ற புகழ்பெற்ற பிரண்டுகளை கொண்ட டைட்டன் நிறுவனம், அதன் நகைப் பிரிவின் தலைமையில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்தியாவின் பாரம்பரிய பண்டிகைக் காலத்தில் நகைகளுக்கான அதிக விற்பனை விலைகள் மற்றும் வலுவான தேவை ஆகியவற்றால் டைட்டனின் மூன்றாம் காலாண்டு லாபம் 61% உயர்ந்துள்ளது.
“ஜனவரி மிகவும் சிறப்பாகச் சென்றுள்ளது. கிட்டத்தட்ட அதே வேகத்தைத் தொடர்கிறது” என்று அசோக் சோந்தாலியா ஒரு நேர்காணலில் கூறினார், தங்கத்தின் விலைகள் குறைந்து வருவது வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபெட் தலைவர் பதவிக்கு தனது தேர்வை அறிவித்த பிறகு, ஜனவரியில் இரண்டு நாட்களில் ஸ்பாட் தங்க விலைகள் கிட்டத்தட்ட 15% சரிந்தன. இந்த ஆண்டு இதுவரை அவை 18% உயர்ந்துள்ளன.
ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் தங்கம் நல்ல வருமானத்தைத் தரும் என்று வாங்குபவர்கள் கருதுவதால், இந்தியர்கள் தங்கத்தை முதலீட்டிற்காக குவித்து வருகின்றனர். அதிக விலைகள் இருந்தபோதிலும் தேவை வலுவுடன் இருப்பது குறித்து சோந்தாலியா கருத்து தெரிவித்தார்.
மூன்றாம் காலாண்டில் நுகர்வோர் எண்ணிக்கையில் வளர்ச்சி மந்தமாக உள்ளது. வருவாய் உயர்வு முதன்மையாக அதிக விற்பனை விலைகளால் உந்தப்பட்டது என்று சோந்தாலியா கூறினார். டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் 42% வருவாய் உயர்வைப் பதிவு செய்துள்ளது.
