டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை திருப்பி அளிக்க நீதிமன்றம் உத்தரவு
நியூயார்க்கில் உள்ள ஒரு மத்திய நீதிமன்ற நீதிபதி, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள இறக்குமதி வரிகளை செலுத்திய நிறுவனங்கள் பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளார், டிரம்ப் அரசுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க தோல்வியான இந்த தீர்ப்பினால் அமெரிக்க வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய திருப்பிச் செலுத்தும் திட்டங்களில் ஒன்றாக இது மாறக்கூடும்.
அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் நீதிபதி ரிச்சர்ட் ஈடன் புதன்கிழமை, “அனைத்து பதிவு இறக்குமதியாளர்களும் கடந்த மாத அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து பயனடைய உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்துள்ளார். இது 1977 சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் டிரம்ப் கடந்த ஆண்டு விதித்த இரட்டை இலக்க இறக்குமதி வரிகளை ரத்து செய்தது.
பணத்தைத் திரும்பப் பெறுதல், தேர்ந்தெடுக்கப்பட்ட மனுதார்களுக்கு மட்டுமல்ல என்றும், அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகளைச் செலுத்திய அனைத்து நிறுவனங்களுக்கும் பரவலாகப் பொருந்தும் என்பதை இந்த உத்தரவு தெளிவுபடுத்துகிறது.
டிசம்பர் நடுப்பகுதி வரை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்க அரசு $13,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. பென் வார்டன் பட்ஜெட் மாதிரியின் மதிப்பீடுகளின்படி, மொத்த பணத்தைத் திரும்பப் பெறுதல் இறுதியில் $17,500 கோடியை எட்டக்கூடும். கணிக்கப்பட்டுள்ள திருப்பிச் செலுத்துதல்களின் அளவு, இறக்குமதி வரிகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் பிப்ரவரி 20 தீர்ப்பின் நிதி தாக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் பணத்தைத் திரும்பப் பெறுவது எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதை இது குறிப்பிடவில்லை.
டென்னசி, நாஷ்வில்லை தளமாகக் கொண்ட வடிகட்டிகள் மற்றும் பிற தயாரிப்புகளின் உற்பத்தியாளரான அட்மஸ் ஃபில்ட்ரேஷன் தொடுத்த வழக்கில் நீதிபதி ஈடன் தீர்ப்பளித்தார். இதுவரை செலுத்திய இறக்குமதி வரிகளை மீட்டெடுக்க உரிமை உண்டு என்று அந்நிறுவனம் வாதிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவு இப்போது நடைமுறையில் இருப்பதால், அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கான ஒரு வழிமுறையை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும்.
