தங்கம் விலை 5 ஆண்டுகளில் $10,000 ஆக உயரும் – ஜெஃபரீஸ் நிறுவனம்
தங்கம் விலை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் $10,000 ஆக உயரக்கூடும் என்று ஜெஃபரீஸ் நிறுவனத்தின் ஈக்விட்டி ஸ்ட்ராட்டஜிக்கான உலகளாவிய தலைவர் கிறிஸ் வுட் கூறியுள்ளார். புவிசார் அரசியல் ஆபத்துகள் மற்றும் ரிசர்வ் வங்கி வாங்குதல்களால் இயக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த, கட்டமைப்பு ரீதியான காளைச் சந்தையில் இது உள்ளது என்று கூறினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்கிய பின்னர் மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இதை கூறியுள்ளார். இதனால் பாதுகாப்பான புகலிடங்களை நாடும் முதலீட்டாளர்களின் கொள்முதல்களினால் தங்கம் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
அவரைப் பொறுத்தவரை, அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அபாயங்களுக்கு எதிரான சில பயனுள்ள ஹெட்ஜ்களில் ஒன்றாக எண்ணெய் பங்குகளுடன் சேர்ந்து தங்கம் உள்ளது. அமெரிக்க அரசு வசம் உள்ளா தங்க தங்கத்தின் மறுமதிப்பீடு ஒரு சாத்தியமான கூடுதல் வினையூக்கியாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்க அரசாங்க தங்கம் மிகக் குறைந்த வரலாற்று விலையில் அதன் பேலன்ஸ் ஷீட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். “இது ஒரு அவுன்ஸ் $32 என்ற மதிப்பீட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் மறு மதிப்பீடு நிச்சயமாக ஒரு சாத்தியம்” என்றார். அத்தகைய நடவடிக்கையின் மூலம் அமெரிக்க அரசு, அதன தங்க இருப்பை பணமாக்குவதற்கும், கடன் பத்திரங்களை திரும்ப வாங்குவதற்கும் அனுமதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட ஏற்றம், G7க்கு வெளியே ரிசர்வ் வங்கிகளின் ஆக்ரோஷமான கொள்முதல் காரணமாக ஏற்பட்டதாக கூறினார். 2022இல் உக்ரைன்-ரஷ்யா மோதலின் போது ரஷ்ய அந்நியச் செலாவணி இருப்புக்கள் முடக்கப்பட்ட பிறகு இந்தப் போக்கு துரிதப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
தற்போதைய உத்தியைப் பொறுத்தவரை, தங்கத்தை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், ஒரு பகுதியை விற்று லாபத்தை வெளியே எடுக்கலாம் என்றார்.
