வட்டி விகிதத்தை அமெரிக்க ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்பு ?
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல், நிலையாக நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒருமனதாக உடன்பட்டனர், ஆனால் அடுத்து என்ன நடக்கலாம் என்பது குறித்து இருவேறு கருத்துக்களில் இருந்தனர். பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்தால், கடன் செலவுகள் அதிகரிக்கும் அபாயத்தை பல கொள்கை வகுப்பாளர்கள் எழுப்பினர். மேலும் ஜனவரி 27-28 கூட்டத்தின் அறிக்கையின் படி, வட்டி விகிதத்தை மேலும் குறைப்பது குறித்து வேறு முரண்பட்டனர்.
கடந்த ஆண்டு வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு குறைக்கப்பட்ட பிறகு பொருளாதாரம் எங்குள்ளது என்பதை மதிப்பிடுவதற்கான ஒரு வழியாக, வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருக்கும் முடிவை கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். இருவர் மட்டுமே விகிதக் குறைப்பை ஆதரித்தனர் என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட கூட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால், பணவீக்கம் பெடரல் ரிசர்வ் வங்கியின் 2% இலக்கை விட அதிகமாக இருந்தால், வட்டி விகித உயர்வை முன்னெடுப்பது பற்றி மற்ற 17 அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது பணவீக்கம், அந்த அளவை விட ஒரு சதவீதப் புள்ளி அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டு பணவீக்கம் குறைந்து, அதன் மூலம் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பணவீக்கத்தின் அளவு, இலக்குகளை விட அதிகமாக இருந்தால், ஃபெடரல் ஓபன் மார்க்கெட் குழு உறுப்பினர்கள் பலரும் வட்டி விகிதத்தை உயர்த்த ஆதரவு அளிக்கும் சாத்தியத்தை இந்த கூட்ட முடிவுகள் பிரதிபலிக்கிறது.
பணவீக்கம் மற்றும் பொருளாதாரம் பற்றிய புதிய தரவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், வட்டி விகிதங்களை சிறிது காலம் நிலையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பணவீக்கம் குறைக்கிறது என்பதற்கான சான்றுகள் கிடைக்கும் வரை வட்டி விகித குறைப்புகள் பொருத்தமானதாக இருக்காது என்று அவரக்ள் வாதிட்டனர்.
