Latest:
ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuationsஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuations
Latest:
ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuationsஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuations
சர்வதேச செய்திகள்

ஃபெடரல் ரிசர்வ் மீது டிரம்பின் அழுத்தம் அதன் நம்பகத்தன்மையை பாதிக்கும்

அமெரிக்க மத்திய வங்கியின் மீது அதிக அரசியல் அழுத்தத்தைச் செலுத்த அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள், அதன் சுதந்திரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்று முன்னாள் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்தார்.

மே 15 வரை ஃபெட் தலைவராகப் பணியாற்றிய பவல், நீதிமன்றங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பிற நிறுவனங்களைப் போலவே, மத்திய வங்கியும் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திடமிருந்து ஒரு அரசியல் ரீதியான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.

பாஸ்டனில் உள்ள ஜான் எஃப். கென்னடி நூலக அறக்கட்டளையில் உரையாற்றிய பவல், தனது ராஜினாமாவிற்காக வெள்ளை மாளிகை கொடுத்த அழுத்தம், தான் தலைவராக இருந்த காலத்தில் நீதித்துறை மேற்கொண்ட குற்றவியல் விசாரணை, மற்றும் ஃபெட் ஆளுநர் லிசா குக்-ஐப் பணிநீக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.

“கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளின் காரணமாக ஃபெட் அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான வழியை ஏதேனும் ஒரு நிர்வாகம் கண்டறிந்தால், எதிர்கால நிர்வாகங்களும் அதையே பின்பற்றும்” என்று ஜான் எஃப். கென்னடி துணிவுக்கான விருது பெற்றபோது பவல் கூறினார். “அனைத்து அமெரிக்கர்களுக்கும் எது சிறந்தது என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மத்திய வங்கி முடிவுகளை எடுக்கும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிடுவார்கள்” என்றார்.

மத்திய வங்கியின் வாஷிங்டன் டி.சி. தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட 2,500 கோடி டாலர் மதிப்பிலான சீரமைப்புப் பணிகள் குறித்து, ஜனவரி மாதம் மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஒரு விசாரணையைத் தொடங்கினர்.

அச்சமயத்தில் பேசிய பவல் — ஏப்ரல் மாதம் கைவிடப்பட்ட அந்த விசாரணை — டிரம்ப் விரும்பிய வேகத்திலும், அளவிலும் வட்டி விகிதங்களைக் குறைக்க ஃபெட் மறுத்ததால் ஏற்பட்ட டிரம்பின் விரக்தியிலிருந்தே உருவானது என்று கூறினார்.

“ஜனநாயக நிறுவனங்களைக் கட்டமைக்கப் பெருமளவு நேரமும், முயற்சியும், பொறுமையும் தேவைப்படுகின்றன; ஆனால் அவற்றை மிக விரைவாகவே தகர்த்துவிட முடியும்” என்று, ஃபெட் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு தான் ஆற்றிய முதல் பொது உரையில் பவல் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *