Latest: செமாக்ளூடைடு மருந்தை அறிமுகப்படுத்தும் நாட்கோ ஃபார்மாIPO மூலம் ரூ.13,000 கோடி திரட்டும் SBI மியூச்சுவல் ஃபண்ட்மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்த சென்செக்ஸ்HDFC வங்கியின் CEO சஷிதர் ஜகதீஷனருக்கு பதவி நீட்டிப்பு ?BNCAP 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டாடா மோட்டார்ஸின் சியராகாலாவதியாகும் நோவோ நோர்டிஸ்கின் செமாக்ளுடைடுக்கான இந்தியக் காப்புரிமைஇந்தியாவின் ஜி.டி.பி பற்றிய தரவுகளின் போதாமையும், விளைவுகளும்How India's GDP Data Misread the Economy and Complicated Policy making: A Deeper Lookஹார்முஸ் நீரிணையில் இந்தியாவிற்கான 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் தேக்கம்வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் 3.5% - 3.75%இல் தக்க வைத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி
Latest: செமாக்ளூடைடு மருந்தை அறிமுகப்படுத்தும் நாட்கோ ஃபார்மாIPO மூலம் ரூ.13,000 கோடி திரட்டும் SBI மியூச்சுவல் ஃபண்ட்மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்த சென்செக்ஸ்HDFC வங்கியின் CEO சஷிதர் ஜகதீஷனருக்கு பதவி நீட்டிப்பு ?BNCAP 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டாடா மோட்டார்ஸின் சியராகாலாவதியாகும் நோவோ நோர்டிஸ்கின் செமாக்ளுடைடுக்கான இந்தியக் காப்புரிமைஇந்தியாவின் ஜி.டி.பி பற்றிய தரவுகளின் போதாமையும், விளைவுகளும்How India's GDP Data Misread the Economy and Complicated Policy making: A Deeper Lookஹார்முஸ் நீரிணையில் இந்தியாவிற்கான 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் தேக்கம்வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் 3.5% - 3.75%இல் தக்க வைத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

இந்தியா மீதான இறக்குமதி வரிகளை 18%ஆக குறைத்த அமெரிக்கா

இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியா மீதான இறக்குமதி வரிகளை முந்தைய 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை இந்த வரிகளால் சிரமப்பட்டு வந்த ஜவுளி, கடல்சார் பொருட்கள் மற்றும் தோல் போன்ற அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகளுக்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து, டிரம்ப், ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத் தளத்தில், “அதேபோல், அவர்களும் அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் வரிகளையும், வரியல்லாத தடைகளையும் பூஜ்ஜியமாகக் குறைக்க முன் வருவார்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்தியாவின் சந்தையைத் திறப்பது தொடர்பான உறுதிமொழிகள் குறித்து எந்தத் தெளிவும் இல்லை. “புதிய அமெரிக்க-இந்திய ஒப்பந்தம், அதிக அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்தியாவின் பிரம்மாண்டமான சந்தைக்கு ஏற்றுமதி செய்யும். விலைகளை உயர்த்தி, கிராமப்புற அமெரிக்காவில் பணத்தைப் புழங்கச் செய்யும்” என்று அமெரிக்க வேளாண் அமைச்சர் புரூக் ரோலின்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் கூறினார். இந்த வாக்குறுதியின் அடிப்படையில், ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் செய்ததற்காக இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத தண்டனை வரிகள் நீக்கப்படுவதாகவும், இதன் மூலம் இந்தியா மீதான இறக்குமதி வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்படுவதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

“பிரதமர் மோடி, 50,000 கோடி டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல தயாரிப்புகளை வாங்க உறுதியளித்துள்ளார்” என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு இந்தியப் பிரதமர், ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் பதிலளித்து, இந்தியப் பொருட்களுக்கான வரிகளைக் 18 சதவீதமாகக் குறைக்க ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தார்.

“இன்று எனது அன்பான நண்பர் அதிபர் டிரம்புடன் பேசியது மகிழ்ச்சி. ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புகளுக்கு இப்போது 18 சதவீதக் குறைக்கப்பட்ட வரி விதிக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி. இந்த அற்புதமான அறிவிப்பிற்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக அதிபர் டிரம்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *