Latest: புதிய கண் சிகிச்சை மருந்தை அறிமுகப்படுத்தும் சைடஸ் நிறுவனம்மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் குவிக்கும் மாருதி சுஸூகிமேற்கு இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் அசோக் லேலண்ட்ஆறு முக்கிய பிரிவுகளில் IT துறை வளர வாய்ப்பு – இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக்விற்பனை மையங்களை 550ஆக குறைக்கும் ஓலா எலக்ட்ரிக்India's Piping and Irrigation Sector Under Pressure: Stock Prices Plummet Amid Market Headwindsஇந்தியாவில் குழாய் பதித்தல் மற்றும் நீர்ப்பாசனத் துறை எதிர்கொள்ளும் சவால்கள்ஒரு கோடி விவசாயிகளுக்கு AI மூலம் உதவும் ஐ.டி.சி நிறுவனம்ஐ.டி நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தம் AI தொழில்நுட்பம்FY26 இல் 65% IPOக்கள் மட்டுமே லாபம் அளித்தன
Latest: புதிய கண் சிகிச்சை மருந்தை அறிமுகப்படுத்தும் சைடஸ் நிறுவனம்மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் குவிக்கும் மாருதி சுஸூகிமேற்கு இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் அசோக் லேலண்ட்ஆறு முக்கிய பிரிவுகளில் IT துறை வளர வாய்ப்பு – இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக்விற்பனை மையங்களை 550ஆக குறைக்கும் ஓலா எலக்ட்ரிக்India's Piping and Irrigation Sector Under Pressure: Stock Prices Plummet Amid Market Headwindsஇந்தியாவில் குழாய் பதித்தல் மற்றும் நீர்ப்பாசனத் துறை எதிர்கொள்ளும் சவால்கள்ஒரு கோடி விவசாயிகளுக்கு AI மூலம் உதவும் ஐ.டி.சி நிறுவனம்ஐ.டி நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தம் AI தொழில்நுட்பம்FY26 இல் 65% IPOக்கள் மட்டுமே லாபம் அளித்தன
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
தங்கம்

மணப்புரம் ஷேர்ஹோல்டர்ஸுக்கு Happy News

Bain கேபிடல், மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவதற்கு SEBI ஒப்புதல் அளித்துள்ளது. செபி, மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவதற்கான பெய்ன் கேபிடலின் ஓப்பன் ஆஃபருக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


பெய்ன் கேபிடல், மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 18.6% பங்குகளை வாங்கியதைத் தொடர்ந்து, கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்கான ஓப்பன் ஆஃபருக்கு செபி (SEBI) ஒப்புதல் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதி இன்னும் பெறப்படவில்லை. இந்த அனுமதி கிடைத்த பிறகு பங்குகளை டெண்டர் செய்யும் செயல்முறை தொடங்கும்.


இந்தியப் பங்கு, பரிவர்த்தனை வாரியம் (SEBI), மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 26% பங்குகளை வாங்குவதற்கான பெய்ன் கேபிடலின் ஓப்பன் ஆஃபருக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது, ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இறுதி ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது.


பெய்ன் கேபிடல் கேரளாவைச் சேர்ந்த இந்த தங்கக் கடன் நிறுவனத்தில் 18.6% பங்குகளை வாங்கிய அதே விலையான ஒரு பங்குக்கு ரூ. 236 என ஓப்பன் ஆஃபர் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோடக் மஹிந்திரா கேபிடல் நிறுவனம் அளித்த குறிப்பின்படி, ரிசர்வ் வங்கியின் இறுதி ஒப்புதல் கிடைத்த பிறகு, பொதுப் பங்குதாரர்களுக்கு ஆஃபர் கடிதம் அனுப்பப்படலாம். செபியின் செப்டம்பர் 12 தேதியிட்ட ஆய்வுக் கடிதத்தின் அடிப்படையில் கோடக் குறிப்பு அமைந்துள்ளது.


பங்கு, வாரண்டுகளின் முன்னுரிமை ஒதுக்கீடுகள் மூலம் 18.6% பங்குகளைப் பெற பெய்ன் நிறுவனம் ரூ. 4,385 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு பி.சி.ஆசியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் XXV, பி.சி. ஆசியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் XIV மூலம் செய்யப்பட்டது.


கோடக் குறிப்பில், ரிசர்வ் வங்கியின் இறுதி ஒப்புதல் கிடைத்த நாளிலிருந்து 12 வேலை நாட்களுக்குள் ஓப்பன் ஆஃபருக்கான டெண்டர் காலம், பிற நடைமுறைகள் தொடங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆஃபருக்கு விருப்பம் தெரிவித்த பொதுப் பங்குதாரர்களுக்கு டெண்டர் காலம் முடிந்த 10 நாட்களுக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும்.


இந்த வாங்குதல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மணப்புரம் ஃபைனான்ஸ், அதன் துணை நிறுவனங்களான ஆசீர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ், மணப்புரம் ஹோம் ஃபைனான்ஸ் ஆகியவற்றுக்கு மத்திய வங்கியின் ஒப்புதல்கள் இன்னும் வரவில்லை என்றும் கோடக் குறிப்பு குறிப்பிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *