22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்திநிதித்துறை

ஆகஸ்டில் அட்டகாசமான வசூல்:

நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் ஜி எஸ் டியாக வசூல் ஆகியுள்ளது. இது கடந்தாண்டை விட 28% அதிகமாகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜி எஸ்டி வரி 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, டெல்லி,உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இலக்க வரி வசூலை செய்துள்ளன . மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் மொத்தம் 7 கோடியே 60 லட்சம் e- பில் பதிவாகியுள்ளன. மொத்தம் வசூலான ஜிஎஸ்டியில் 54 ஆயிரம் கோடி மத்திய ஜிஎஸ்டியும், 56 ஆயிரம் கோடி ரூபாய் மாநில ஜிஎஸ்டி ஆகவும் உள்ளது. இந்த உயர்வு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பையும் மத்திய அரசு முன் வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *