டெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதன்கிழமை அன்று, அவரது மற்றொரு ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன், டெஸ்லாவை இணைபதற்கான வாய்ப்பைத் திறந்து வைத்துள்ளார். இந்த சாத்தியக்கூறை அவர் நிராகரிக்க மறுத்ததோடு, இரு நிறுவனங்களுக்கும் இடையே அதிகரித்து வரும் பொதுவான அம்சங்களையும் சுட்டிக்காட்டினார்.
“இது சரியான செயல்முறையுடன் செய்யப்பட வேண்டும்” என்றார். எலான் மஸ்கின் மின்சார வாகன மற்றும் விண்வெளி நிறுவனங்களை இணைக்கும் சாத்தியக்கூறு குறித்து முதலீட்டாளர்களும் ஆய்வாளர்களும் நீண்ட காலமாக ஊகித்து வருகின்றனர். ஸ்பேஸ்எக்ஸின் சாதனை அளவான 7,500 கோடி டாலர் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுச் செயல்முறையின் போது இந்த விவாதம் தீவிரமடைந்தது.
எலான் மஸ்கின் கருத்துக்களுக்குப் பிறகு, அவர் டெஸ்லாவின் பொது ஆலோசகர் பிராண்டன் எர்ஹார்ட்டைத் தொலைபேசியில் அழைத்தார். அவரோ, ஸ்பேஸ்எக்ஸை “பல நன்மை பயக்கும் பரிவர்த்தனைகளை” வழங்கும் ஒரு “சிறந்த கூட்டாளி” என்று வழக்கமான வார்த்தைகளில் குறிப்பிட்டார்.
டெஸ்லாவின் முதலீட்டாளரான டீப்வாட்டர் அசெட் மேனேஜ்மென்ட்டின் நிர்வாகப் பங்குதாரரான ஜீன் மன்ஸ்டர், இந்த அழைப்பு அடுத்த சில ஆண்டுகளில் இரு நிறுவனங்களும் இணைவது உறுதி என்ற தனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியதாகக் கூறினார். “இன்று இந்த இரண்டும் இணைவதற்கான வாய்ப்பு 90% என்று நான் கூறுவேன்,” என்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஒரு காணொளியில் கூறினார். “நேற்று நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், அது 80% என்று நான் கூறியிருப்பேன்” என்றார். டெஸ்லா ஏற்கனவே சில ஸ்பேஸ்எக்ஸ் திட்டங்களுக்கு பேட்டரிகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு சிப்களை உற்பத்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செமி கண்டக்டர் உற்பத்தி மையமான டெராஃபாப்பை இந்த நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கி வருகின்றன.
இந்த நிறுவனங்களை இணைப்பது எலான் மஸ்க்கின் பெருநிறுவன சாம்ராஜ்யத்தை எளிதாக்கி, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், உற்பத்தி, ஆற்றல் மற்றும் விண்வெளி உள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த நிறுவனத்தை உருவாக்கும் என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். “இரு நிறுவனங்களுக்கு இடையேயான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு ஏற்கனவே ஆழமாக உள்ளது” என்று இந்த மாதம் ஜேபிமோர்கன் ஆய்வாளர்கள் கூறினர்.
