22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஐ அம் வாட்சிங் – எச்சரிக்கும் பிக் பாஸ்…

ஏர்டெல், சன் டைரக்ட், டாடா பிளே, டிஷ் டிவி ஆகிய நிறுவனங்கள் லைசன்ஸ் கட்டணத்தை செலுத்துவதில் முறைகேடு
நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனங்கள் மத்திய கணக்கு தணிக்கைத் துறை கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது..
வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக சந்தா வசூலிப்பது, சரியான வகையில் வரி செலுத்தாது உள்ளிட்ட புகார்கள்
தொடர்பாகவும் தணிக்கையை மத்திய கணக்கு தணிக்கைத்துறை மேற்கொண்டுள்ளது 6 நிறுவனங்களுக்கு வெய்வரும் அண்மையில் அளிக்கப்பட்டது. அதனை முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்ற கோணத்திலும் தணிக்கை நடைபெறுகிறது தொலைக்காட்சி, பன்பலை உள்ளிட்ட நிறுவனங்களின் வாயிலாக மத்திய அரசுக்கு 23 நிதியாண்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க உள்ளது. பெரிய மற்றும் தனியார் டிடிஎச் நிறுவனங்களின் வருவாய் குறித்த கேள்வி திடீரென முன்னெழுந்துள்ளது. அந்த நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஓடிடி நிறுவனங்களின் வருகையால் வீடுகளில் டிவி பார்க்கும் அளவும்,டிடிஎச் பயன்பாடும் கணிசமாக குறைந்து வருகிறது
இந்த நிலையில் வருவாய் இழப்பை சரிசெய்ய மத்திய அரசு சில சலுகைகளையும் டிடிஎச் நிறுவனங்களுக்கு
அளித்துள்ளது. அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கணக்கு தணிக்கைத்துறை கண்காணிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *