Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

நூற்றுக்கணக்கானோரை வேலையை விட்டு தூக்கும் விப்ரோ..

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் விப்ரோ நிறுவனம் தனது நடுத்தர நிலை பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் குறைவான மார்ஜின் கொண்ட நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 16 விழுக்காடு மார்ஜினை கொண்டுள்ளது. டாடா கன்சல்டன்சி நிறுவனம், இன்போசிஸ், எச்சிஎல் நிறுவனத்தின் மார்ஜின் 25,20.5 மற்றும் 19.8 விழுக்காடு மார்ஜினை முறையே கொண்டுள்ளன.
ஒரு மாதத்துக்கு முன்பே நடுத்தர பணியாளர்களுக்கு கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காப்கோ என்ற நிறுவனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு 1.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விப்ரோ வாங்கியது. கொரோனாவுக்கு பிறகு கன்சல்டிங் வணிகம் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கையை விப்ரோ நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நிலை 3-ல் உள்ள பணியாளர்களின் பணிகளை தற்போது நிலை 2-ல் உள்ள பணியாளர்களுக்கு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. நிலை 1 -ல் உள்ள பணிகள் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளது.
விப்ரோவில் நடுத்தர பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டாலும், இப்போதும் தலைமை பன்பு கொண்ட ஊழியர்களும், திறமையான பணியாளர்கள் இருப்பதாக எவரஸ்ட் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெண்டார் சாமுவேல் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *