Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

குறைந்தது இந்தியாவின் தொழில்வளர்ச்சி..

இந்தியாவின் தொழிற்சாலை வளர்ச்சி நவம்பர் மாதத்தில் குறைந்துள்ளதை அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி 5.4% ஆக பதிவாகியுள்ளது. 6.5% வரை வளர்ச்சி இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் மதிப்பிட்டிருந்தது. எச்எஸ்பிசி நிறுவனத்தின் இந்திய வாங்கும் குறியீட்டு அளவு 57.5-ல் இருந்து 56.5ஆக கடந்தமாதம் குறைந்துள்ளது. பணவீக்கத்தால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் தொழில் வளர்ச்சி இந்தாண்டில் இரண்டாவது குறைந்தபட்ச அளவாகும். உற்பத்தி மற்றும் விற்பனை செலவுகள் அதிகரிப்பே இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ரசாயனங்கள், பருத்தி, தோல் மற்றும் ரப்பரின் மூலப்பொருட்கள் விலையேற்றம் நவம்பரில் நடந்துள்ளது. இந்த விலையேற்றத்தை நிறுவனங்கள் தாங்கிக்கொள்ளாமல், கூலி, போக்குவரத்துச் செலவுகளை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுகின்றன. கடந்த அக்டோபர் மாத தரவுகளின்படி இந்தியாவின் பணவீக்கம் 6.21%அதிகமாக உள்ளது. இது கடந்த 14 மாதங்களில் மிகவும் அதிகம். தாங்கிக்கொள்ளும் அளவாக ரிசர்வ் வங்கி 2-6 விழுக்காடு வரை இருக்கலாம் என்று கூறியிருந்த நிலையில் அக்டோபர் மாத தரவுகள் கவலை அளிக்கின்றன. நிலைமை சிக்கலாகி வரும் நிலையில், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி அடுத்தாண்டுதான் கையில் எடுக்கும் என்றும் ஒரு தரப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *