டெப்பாசிட்களின் பெரும் பகுதியை கடன் விநியோகத்திற்கு ஒதுக்கும் வங்கிகள்
வங்கிகள் தங்கள் வைப்புத்தொகையில் அதிக விகிதத்தை கடன்களாக கொடுத்து, குறுகிய கால நிதி கருவிகளை நம்பியிருப்பதை அதிகரித்து வருவதாக, சமீபத்திய ரிசர்வ் வங்கி தரவு காட்டுகிறது. பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த பதினைந்து நாட்களில் கடன்-வைப்புத்தொகை (CD) விகிதம் சாதனை அளவில் 82.5% ஆக உயர்ந்தது. ஏனெனில் கடன் விநியோக வளர்ச்சி, வைப்புத்தொகை வளர்ச்சியை விட 281 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு விஞ்சியது.
இந்த இடைவெளியைக் குறைக்க, வங்கிகள் குறுகிய கால கடன்கள் மூலம் நிதி திரட்டி வருகின்றன. ரூ.1.34 லட்சம் கோடி மதிப்புள்ள வைப்புச் சான்றிதழ்களை (CDகள்) வழங்கி நிதி திரட்டியுள்ளன. இது எந்த இரண்டு வார காலத்திற்கும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
“வலுவான கடன் தேவைக்கு மத்தியில், வங்கிகள் வைப்புத்தொகை வளர்ச்சியைத் துணையாகக் கொள்ள குறுகிய கால சந்தை கடன்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளன” என்று கேர்எட்ஜ் மதிப்பீடுகளின் மூத்த இயக்குனர் சஞ்சய் அகர்வால் கூறினார். “சாதனை அளவுக்கு CD வெளியீடு, சந்தை மூலம் நிதி திரட்டுதலை எடுத்துக்காட்டுகிறது. CD விகிதம் 82.5% ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து நான்காவது அரை மாத காலமாக, உச்சம்டைந்துள்ளது” என்றார். பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரத்தில், வைப்புத்தொகை ரூ.1.08 லட்சம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது. இது முந்தைய இரு வாரத்தில் ஏற்பட்ட ரூ.40,000 கோடி சரிவுடன் ஒப்பிடும் போது கூர்மையான சரிவாகும்.
மொத்த வங்கி வைப்புத்தொகை ரூ.247.7 லட்சம் கோடியாக, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 10.9% வளர்ச்சியடைந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 10.3% ஆக இருந்தது. வங்கிக் கடன் ரூ.204.3 லட்சம் கோடியை எட்டி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 13.7% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 11.3% ஆக இருந்தது.
பிப்ரவரி 15, 2026 நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் (OMOs) மூலம், பணப்புழக்கம் 3.1 லட்சம் கோடி உபரியாக இருந்தது.
