இந்திய மருந்து ஏற்றுமதி-₹4,500 கோடி இழப்பு??
ஈரான் போர் இந்தியாவின் மருந்து ஏற்றுமதியை பெரிய அளவில் பாதித்துள்ளது. மார்ச் மாதம் வரை போர் தொடர்ந்தால், சரக்கு போக்குவரத்து செலவுகள் உயர்வு காரணமாக, 30 முதல் 50 கோடி டாலர்கள் வரை (₹2,500 முதல் ₹4,500 கோடி வரை) இழப்பை ஏற்படுத்தும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
சீனாவிலிருந்து வரும் மொத்த மருந்துகளுக்கான சரக்கு போக்குவரத்து செலவுகள், ஒரு கண்டெய்னருக்கு $1,200இல் இருந்து $2,400ஆக இரட்டிப்பாகியுள்ளது. அதே நேரத்தில் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், வளைகுடா நாடுகளுக்கு சரக்குகளை மறுப்பது அல்லது $3,500-5,000 கூடுதல் கட்டணம் விதிப்பது அதிகரித்து வருகிறது. இது விநியோகத்தை சிக்கலாக்குகிறது என்று தொழில்துறை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு ஆசியா மற்றும் ஜிசிசி பிராந்தியத்திற்கான மருந்து ஏற்றுமதிகள் இந்தியாவின் $3,000 கோடிக்கும் அதிகமான மருந்து ஏற்றுமதியில் தோராயமாக 5-6% பங்களிக்கின்றன. கூடுதலாக, மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய போக்குவரத்து புள்ளியாகவும் மேற்கு ஆசியா உள்ளது.
“இந்தியாவில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. ஆனால் சரக்கு கட்டண அதிகரிப்பு பிரச்சினை இரண்டு கோணங்களில் நம்மை பாதிக்கும். ஒன்று, சீனா இந்தியாவிற்கு மூலப்பொருள், APIகள் மற்றும் இடைநிலைப் பொருட்களை வழங்குகிறது. எனவே சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது பாதிக்கப்படும்” என்று Pharmexcil (இந்திய மருந்துகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்) தலைவர் நமித் ஜோஷி கூறினார். “பின்னர் இந்தியாவில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு மேற்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யும் போது, அதுவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் மேலும் கூறினார்.
போர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாக, பெரும்பாலான சரக்கு கப்பல்கள் வளைகுடா நாடுகளுக்கு கடல் சரக்குகளை எடுத்துச் செல்ல மறுத்து வருகின்றன. அதிகரித்த கட்டணத்தை செலுத்தத் தயாராக இருந்தாலும் கூட இவை மறுத்து வருகின்றன என்று பெயர் வெளியிட விரும்பாத ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் மற்றொரு உயர் அதிகாரி கூறினார்.
