அமெரிக்காவில் புற்றுநோய் மருந்தை திரும்பப் பெற்ற சிப்லா நிறுவனம்
சிப்லாவின் அமெரிக்காவைச் சேர்ந்த துணை நிறுவனம் ஒன்று, உற்பத்திப் பிரச்சினை காரணமாக 400க்கும் மேற்பட்ட ஜெனிரிக் ரக புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய பெட்டிகளை திரும்பப் பெறுவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் (USFDA) கூறியுள்ளது.
நியு ஜெர்சியின் வாரன் நகரை தளமாக கொண்ட சிப்லா யுஎஸ்ஏ நிறுவனம், இரண்டு வகை (150 மி.கி மற்றும் 200 மி.கி) நிலோடினிப் காப்ஸ்யூல்களை திரும்பப் பெறுகிறது என்று அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அதன் சமீபத்திய அமலாக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“தோல்வியடைந்த டேப்லெட்/காப்ஸ்யூல் விவரக்குறிப்புகள்” காரணமாக பாதிக்கப்பட்ட தொகுதியை (271 மற்றும் 164 அட்டைப்பெட்டிகள்) இந்நிறுவனம் திரும்பப் பெறுகிறது என்று அது கூறியது. சிப்லா யுஎஸ்ஏ நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரி 18 அன்று வகுப்பு III ரக சுயாதீன திரும்பப் பெறுதலைத் தொடங்கியது. “விதி மீறல்கள் புகார்கள் கொண்ட மருந்துகளை திரும்பப் பெறுவதினால் பாதகமான சுகாதார விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லாத சூழ்நிலையில், வகுப்பு III ரக திரும்பப் பெறுதல் தொடங்கப்படுகிறது” என USFDA கூறியுள்ளது.
புற்றுநோய் செல்கள் பெருகுவதை சமிக்ஞை செய்யும் அசாதாரண புரதத்தின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் நிலோடினிப் செயல்படுகிறது. இது புற்றுநோய் செல்கள் பரவுவதை நிறுத்த அல்லது மெதுவாக்க உதவுகிறது.
அமெரிக்காவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான USFDA- இணக்கமான மருந்து ஆலைகளை இந்தியா கொண்டுள்ளது.
இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்க மக்களுக்கு கணிசமான அளவு மருந்துகளை வழங்குகின்றன. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் 10 மருந்துகளில், நான்கு இந்திய நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
