4 ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் சந்தை மதிப்பை இழந்த டி.சி.எஸ்
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (டிசிஎஸ்) சந்தை மதிப்பு, 2021இல் அதன் சந்தை மதிப்பை விட கிட்டத்தட்ட 10,000 கோடி டாலர்களை இழந்துள்ளது. AI தொழில்நுட்பத்தினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.
டிசிஎஸ்ஸின் சந்தை மதிப்பு 2021இல் முதன்முமுறையாக 20,000 கோடி டாலர்களை தாண்டியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய நிறுவனமாகவும், முதல் இந்திய ஐடி சேவை நிறுவனமாகவும், திகழ்ந்தது.
ஆகஸ்ட் 30, 2024 அன்று என்எஸ்இயில் இந்தப் பங்கு விலை ரூ.4,592 என்ற உச்சத்தை எட்டியது. இருப்பினும், அதன் பின்னர் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன. இது குறிப்பிடத்தக்க சந்தை மூலதன அரிப்புக்கு வழிவகுத்தது. நேற்று டிசிஎஸ் பங்கு விலை 1% க்கும் அதிகமாக சரிந்து பிற்பகல் வர்த்தகத்தில் என்எஸ்இயில் ரூ.2,488 ஆக வர்த்தகமானது.
செவ்வாய்க்கிழமை இறுதியில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.9.09 லட்சம் கோடிக்கு (கிட்டத்தட்ட $9,900 கோடி) சற்று அதிகமாக இருந்தது. இன்போசிஸ், எச்.சி.எல்.டெக், டெக் மஹிந்திரா பிற ஐ.டி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க சரிவுகளைக் கண்டன.
பிப்ரவரி தொடக்கத்தில் AI ஸ்டார்ட்அப் ஆந்த்ரோபிக் அதன் கிளாட் கோவர்க் முகவருக்கான பிளக் இன்களை அறிமுகப்படுத்திய பின்னர் இந்த வீழ்ச்சி தொடங்கியது. இதன் மூலம் சட்டப் பிரிவு, விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற செயல்பாடுகளில் பணிகளை தானியக்கமாக்க முடியும்.
இந்த ஆண்டு இதுவரை டிசிஎஸ் மற்றும் விப்ரோ பங்குகள் சுமார் 24% சரிந்துள்ளன. அதே நேரத்தில் இன்போசிஸ் 21% சரிந்துள்ளது. எச்.சி.எல்.டெக் மற்றும் டெக் மஹிந்திரா பங்குகள் சுமார் 17% சரிந்துள்ளன. அதே நேரத்தில் எல்.டி.ஐ.எம்.டி.ரீ 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 30% சரிந்துள்ளது.
ஆனால் ஐடி பங்குகள் பற்றி நுவாமா ஆய்வு நிறுவனம் தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளது, ஆந்த்ரோபிக் தொடர்ச்சியான AI கருவி வெளியீட்டைத் தொடர்ந்து AI தலைமையிலான இடையூறு குறித்த அச்சத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காணப்பட்ட தோராயமாக 20% சரிவு, பங்கு மதிப்பீடுகளை கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது என்று வாதிடுகிறது.
