அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்
ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2026 க்கு இடையில், வெள்ளி விலைகள் 400 சதவீதம் உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு $24 இலிருந்து $120 என்ற உச்சத்தை எட்டின. உச்ச விலையில் இந்திய முதலீட்டாளர்கள் $460 கோடி அளவுக்கு முதலீடு செய்து, பின்னர் படுதோல்வியடைந்தனர் என்று வல்லம் கேபிடல் ரிசர்ச்சின் குறிப்பு தெரிவிக்கிறது.
ஜனவரி 2022 முதல் பிப்ரவரி 2025 வரை, உலகளாவிய வெள்ளி வர்த்தக நிதிகள் (ETFகள்) மொத்தம் $405.6 கோடிக்கும் அதிகமாக வெள்ளியை விட்டு வெளியேறின. ஒவ்வொரு மாதமும் சராசரியாக $10.7 கோடி வெளியேற்றப்பட்டது. ஆனால் இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் அதே காலகட்டத்தில் $157.48 கோடி முதலீடு செய்தனர். மாதத்திற்கு சுமார் $4.1 கோடி என்ற அளவில் முதலீடு செய்தனர்.
இந்த கட்டத்தில் (மார்ச் முதல் ஆகஸ்ட் 2025 வரை), இந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் இருவரும் ஒரே பக்கத்தில் இருந்தனர்.
வெள்ளி விலைகள் $33 இலிருந்து $39 ஆக உயர்ந்ததால், உலகளாவிய நிதிகள் ஆறு மாதங்களில் $485.4 கோடியை முதலீடு செய்தன. இந்திய முதலீட்டாளர்கள் மாதத்திற்கு $20.68 கோடியாக அதிகரித்தனர்.
செப்டம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை, வெள்ளி விலைகள் 182 சதவீதம் உயர்ந்தன – $42.50 இலிருந்து $120 ஆக உயர்ந்தன,
உலகளாவிய நிறுவன நிதிகள் இதைப் பயன்படுத்தி வெளியேறி, $355 கோடி அளவுக்கு விற்று லாபம் பார்த்தனர். மறுபுறம், இந்திய முதலீட்டாளர்கள் ஐந்து மாதங்களில் $460.19 கோடி மதிப்புள்ள வெள்ளியை வாங்கினர்.
இந்த கடைசி கட்டத்தில் (பிப்ரவரி 2026), வெள்ளி விலை அதன் உச்சமான $120இல் இருந்து $81.58 ஆக கடுமையாக சரிந்தது. இந்திய சில்லறை முதலீட்டாளர்கள், பீதியடைந்து $10.06 கோடியை வெளியே எடுத்தனர். விலை வீழ்ச்சிக்கு பிறகு மிகக் கீழே விற்பனை செய்தனர்.
“உலகளாவிய நிதிகள் அதற்கு நேர்மாறாகச் செய்தன. அவர்கள் ஒரே மாதத்தில் $178.8 கோடிக்கு வாங்கினர். மற்றவர்கள் ஓடிப்போனதால் அமைதியாக வாங்கினர். உலகளாவிய நிதிகள் அதிக விலையில் விற்று குறைந்த விலையில் வாங்கின” என்று வல்லம் கேபிடல் தெரிவித்துள்ளது.
