Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்

ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2026 க்கு இடையில், வெள்ளி விலைகள் 400 சதவீதம் உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு $24 இலிருந்து $120 என்ற உச்சத்தை எட்டின. உச்ச விலையில் இந்திய முதலீட்டாளர்கள் $460 கோடி அளவுக்கு முதலீடு செய்து, பின்னர் படுதோல்வியடைந்தனர் என்று வல்லம் கேபிடல் ரிசர்ச்சின் குறிப்பு தெரிவிக்கிறது.

ஜனவரி 2022 முதல் பிப்ரவரி 2025 வரை, உலகளாவிய வெள்ளி வர்த்தக நிதிகள் (ETFகள்) மொத்தம் $405.6 கோடிக்கும் அதிகமாக வெள்ளியை விட்டு வெளியேறின. ஒவ்வொரு மாதமும் சராசரியாக $10.7 கோடி வெளியேற்றப்பட்டது. ஆனால் இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் அதே காலகட்டத்தில் $157.48 கோடி முதலீடு செய்தனர். மாதத்திற்கு சுமார் $4.1 கோடி என்ற அளவில் முதலீடு செய்தனர்.

இந்த கட்டத்தில் (மார்ச் முதல் ஆகஸ்ட் 2025 வரை), இந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் இருவரும் ஒரே பக்கத்தில் இருந்தனர்.
வெள்ளி விலைகள் $33 இலிருந்து $39 ஆக உயர்ந்ததால், உலகளாவிய நிதிகள் ஆறு மாதங்களில் $485.4 கோடியை முதலீடு செய்தன. இந்திய முதலீட்டாளர்கள் மாதத்திற்கு $20.68 கோடியாக அதிகரித்தனர்.

செப்டம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை, வெள்ளி விலைகள் 182 சதவீதம் உயர்ந்தன – $42.50 இலிருந்து $120 ஆக உயர்ந்தன,

உலகளாவிய நிறுவன நிதிகள் இதைப் பயன்படுத்தி வெளியேறி, $355 கோடி அளவுக்கு விற்று லாபம் பார்த்தனர். மறுபுறம், இந்திய முதலீட்டாளர்கள் ஐந்து மாதங்களில் $460.19 கோடி மதிப்புள்ள வெள்ளியை வாங்கினர்.

இந்த கடைசி கட்டத்தில் (பிப்ரவரி 2026), வெள்ளி விலை அதன் உச்சமான $120இல் இருந்து $81.58 ஆக கடுமையாக சரிந்தது. இந்திய சில்லறை முதலீட்டாளர்கள், பீதியடைந்து $10.06 கோடியை வெளியே எடுத்தனர். விலை வீழ்ச்சிக்கு பிறகு மிகக் கீழே விற்பனை செய்தனர்.

“உலகளாவிய நிதிகள் அதற்கு நேர்மாறாகச் செய்தன. அவர்கள் ஒரே மாதத்தில் $178.8 கோடிக்கு வாங்கினர். மற்றவர்கள் ஓடிப்போனதால் அமைதியாக வாங்கினர். உலகளாவிய நிதிகள் அதிக விலையில் விற்று குறைந்த விலையில் வாங்கின” என்று வல்லம் கேபிடல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *