உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் JSW MG மோட்டார் இந்தியா
JSW MG மோட்டார் இந்தியா நிறுவனம், அதன் உதிர பாகங்கள் விநியோகஸ்தர்களுடன் இணைந்து, குஜராத்தில் உள்ள ஹலோல் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நாட்டில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்தவும் சுமார் ரூ. 6,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தது.
JSW குழுமம் மற்றும் SAIC மோட்டார் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான JSW MG மோட்டார் இந்தியா, ஜனவரி 2028-க்குள் ஹலோல் ஆலையின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 2.20 லட்சம் வாகனங்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்குவது தொடர்பாக SAIC மோட்டாருடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் JSW குழுமம் தெரிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள இந்தக் குழுமம், MG மோட்டார் இந்தியாவில் 35 சதவீதப் பங்குகளையும், SAIC மோட்டர் 49 சதவீதப் பங்குகளையும் கொண்டுள்ளன; மீதமுள்ள பங்குகள் மற்ற இந்திய முதலீட்டாளர்கள், டீலர்கள் மற்றும் ஊழியர்களிடம் உள்ளன.
“தற்போது, MGI (JSW MG மோட்டார் இந்தியா) மேற்கொண்டுள்ள மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் சுமார் ரூ. 3,500 கோடியாக உள்ளன. எங்கள் முதலீட்டிற்கு மேலதிகமாக, எங்களின் உதரி பாக விநியோகஸ்தர்களும் சுமார் ரூ. 2,500 கோடி வரை முதலீடு செய்கின்றனர். எனவே, JSW MGI-யின் தேவைக்காக, ஒரு பகுதி உதிரி பாக விநியோகஸ்தர்களாலும் மற்றொரு பகுதி எங்களாலும் என மொத்தம் சுமார் ரூ. 6,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது,” என்று JSW MG மோட்டார் இந்தியாவின் இயக்குனர் பார்த்த் ஜிண்டால் கூறினார். ஹெக்டர் டோமாஹாக்கின் மின்சார வாகனம் மற்றும் PHEV (பிளக்-இன் ஹைப்ரிட்) பதிப்புகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டோமாஹாக் EV மற்றும் PHEV ஆகியவற்றின் விலை முறையே ரூ. 19.49 லட்சம் மற்றும் ரூ. 2.70 லட்சம் ஆகும். இந்த முதலீட்டின் ஒரு பகுதி ஹலோல் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும் என்று பார்த்த் தெரிவித்தார்.
