சியரா எஸ்யூவி உற்பத்தியை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சியரா எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் 100,000 யூனிட்களை தாண்டியுள்ளது.
ஜனவரி நடுப்பகுதியில் சியராவின் டெலிவரிகள் தொடங்கின. பிப்ரவரி நிலவரப்படி இந்நிறுவனம் ஏற்கனவே 14,000க்கும் மேற்பட்ட யூனிட்களை டெலிவரி செய்துள்ளது என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆர்டர்கள் அதிகரித்து வரும் நிலையில், தேக்கத்தை நிவர்த்தி செய்ய, இந்நிறுவனம் அதன் உற்பத்தி செயல்பாடுகள் மற்றும் சப்ளையர் நெட்வொர்க்கில் கவன்ம் செலுத்தி, உற்பத்தியை அதிகரித்து வருவதாக மேலும் கூறினார்.
“உற்பத்தி மாதந்தோறும், காலாண்டுக்கு காலாண்டு என்ற அடிப்படையில் சீராக அதிகரித்து வருகிறது. எங்கள் குழுக்கள் உற்பத்தி மற்றும் சப்ளையர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன. முன்பதிவு முதல் டெலிவரி வரையிலான காத்திருப்பு காலத்தை படிப்படியாகக் குறைத்து, தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தின் மிக உயர்ந்த அளவை உறுதி செய்கின்றன” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இருப்பினும், இந்நிறுவனம் குறிப்பிட்ட உற்பத்தி எண்கள் அல்லது மாடலுக்கான திறன் இலக்குகளைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது.
உற்பத்தி நிலைப்படுத்தப்பட்டு, விநியோகச் சங்கிலிகள் தேவைக்கு ஏற்ப சீரமைக்கப்படுவதால், டாடா மோட்டார்ஸ் இரண்டாவது காலாண்டிற்குள் சியரா உற்பத்தியை மாதத்திற்கு சுமார் 15,000 யூனிட்டுகளாக உயர்த்த விரும்புவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் ஐ.சி எஞ்சின் (ICE) ரகத்தின் சுமார் 12,000 யூனிட்கள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ‘ரோவா’ என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட சியராவின் மின்சார வாகன வழித்தோன்றலின் உற்பத்தி தொடங்கியவுடன், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையை 70,000 யூனிட்டுகளுக்கு மேல் பதிவு செய்ததை அடுத்து, சியரா விற்பனையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிப்புற சூழல் நிலையாக இருந்தால், சியராவின் அதிகரிக்கும் அளவுகள், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பஞ்ச் உடன் சேர்ந்து, இந்நிறுவனம் ஒரு மாதத்திற்கு சுமார் 70,000 யூனிட் உற்பத்தியைத் தக்கவைக்க உதவும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
