இந்தாண்டில் மட்டும் 81,200 பேர் பணி நீக்கம்..!!
உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 81,200 பேரை பணி நீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. Fyi என்ற சுதந்திரமான அமைப்பு வேலை இழப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் உலகளவில் டெக் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நடக்கும் பணி நீக்கங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது பணியாளர்களில் 10%பேரை பணிநீக்க இருப்பதாக கூறியுள்ளது. அதாவது மெட்டாவில் மட்டும் 8,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். மனிதர்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு நுட்பங்களிலும் அது சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்துவதிலும் அந்நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.
கடந்தாண்டில் மட்டும் (2025)1லட்சத்து 24,201 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மெட்டாவைப் போலவே ஆரக்கள் நிறுவனம் தனது பணியாளர்களில் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் 18 % அளவாகும். இதன் விளைவாக இந்தியாவில் ஆரக்கள் நிறுவனத்தில் பணியாற்றிய 12 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.
ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முதலில் மென்பொருள் நிறுவனங்களிலும் பின்னர் அது மின்வணிக நிறுவனங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
பெரிய நிறுவனங்களான வால்ட் டிஸ்னி நிறுவனம், ஸ்னாப்.இன்க் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டன.இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது.ஸ்னாப்சாட் நிறுவனத்தின் பணயாளர்களில் 16 விழுக்காடு பேர் கடந்த 15 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதே நாளில் வால்ட் டிஸ்னியில் ஆயிரம் பேர் குறிப்பாக மார்கெட்டிங் பிரிவில் வேலை இழந்தனர்.
எபிக் கேம்ஸ், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் முறையே ஆயிரம் மற்றும் 500 பேர் வரை வேலை இழந்தனர். இதேபோல் Block, Amazon உள்ளிட்ட நிறுவனங்களில் சுமார் 20,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
