மின்சார சமையல் சாதனங்களில் கவனம் செலுத்தும் Stovekraft
இந்தியாவில் சமையல் உபகரணங்கள் குறிப்பாக அடுப்புகள் மின்மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் அடுத்த கட்டத்தை நோக்கி StoveKraft நிறுவனம் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
தங்கள் நிறுவனத்தின் பொருட்களில் இண்டக்சன் அடுப்புகள் முதல் மின்சார குக்கர்கள் மற்றும் ஏர் ஃபிரையர்கள் அதிகம் விற்பதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர காந்தி குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சியின் அடுத்த அலை நிச்சயம் மின்சாரத்தில் சமையல் செய்வதாகத்தான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமையல் எரிவாயுவை மட்டும் சார்ந்து இருப்பதை முற்றிலுமாக குறைக்க விரிவான திட்டங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துறையில் இருக்கும் பீஜியன் நிறுவனத்தின் பொருட்கள் அதிகம் விற்பனை செய்து வருவதுடன் வலுவான வரவேற்பு இருக்கிறது. வழக்கமாக ஒரு வாரத்தில் அந்நிறுவனத்தின் சாதனங்கள் 1 பொருள் விற்கும் இடத்தில் தற்போது அது 4 மடங்கு உயர்ந்துள்ளது.
தேவை அதிகரிப்பு காரணமாக கர்நாடக மாநிலம் ஹரோஹல்லி பகுதியில் இயங்கும் தங்கள் ஆலையில் கூடுதலாக 2 லட்சம் யூனிட் இண்டக்சன் அடுப்புகளை உற்பத்தி செய்ய இருப்பதாகவும் காந்தி குறிப்பிட்டார்.
இந்த மின்சார அடுப்புகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் விற்பனையில் ஆன்லைனில் ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மின்வணிகத்தில் மட்டுமே 35% அளவுக்கு அடுப்புகள் விற்பனையாகின்றன. இது மட்டுமின்றி 2022ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த நிறுவனத்துக்கு 350 க்கும் மேற்பட்ட கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாகவும் காந்தி தெரிவித்தார்.
உள்நாட்டைப் போலவே வெளிநாட்டு ஏற்றுமதியும் தங்கள் 12-13 விழுக்காடு வருவாயில் மிக முக்கிய தூணாக திகழ்வதாகவும், அந்த நிறுவனம் உலகளவில் பிரபலமாக இருக்கும் வால்மார்ட், ஐகியா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் சிறந்த நட்புறவு கொண்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டார்.
விற்பனைக்கு பிறகான கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுக்க 650க்கும் அதிகமான சேவை மையங்களையும், 2500க்கும் மேற்பட்ட Franchiseகளையும் வைத்துள்ளதாகவும் காந்தி சுட்டிக்காட்டினார். இத்தகைய காரணிகளால் StoveKraft நிறுவனம் இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார சமையல் பாத்திரங்களின் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாகவும் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
