22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இந்த நிறுவன பங்குகள் வைத்துள்ளீர்களா?.. ஜாக்பாட் உங்களுக்குத்தான்:

ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியதும். ஐடிசியின் ஒரு பங்கின் விலை 329 ரூபாய் 60 காசுகளாக இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஐடிசி நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஐடிசி ஹோட்டல்களின் பங்குகள் தனியாக விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி தெரிவித்ததும், நாடு முழுக்க உணவு தானியங்களின் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளதுமே ஐடிசி நிறுவன பங்குகள் விலை உயர காரணமாக உள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதி வாரத்தில் அந்நிறுவன பங்குகள் இதுவரை இல்லாத அளவாக 207 ரூபாய் என்ற குறைந்த அளவுக்கு விற்கப்பட்டது. அப்போது இந்த பங்குகளை வாங்கியிருந்தவர்களுக்கு தற்போது கிட்டத்தட்ட 60 விழுக்காடு ஒரு பங்கில் லாபம் கிடைத்திருக்கும். ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த 2017ம் ஆண்டு மிக அதிக உச்சமாக ஒரு பங்கு 367 ரூபாய் 70 காசுகளாக இருந்தது. வரும் தீபாவளிக்குள் 370 ரூபாய் வரை ஒரு பங்கின் விலை உயரும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அவசரப்பட்டு ஐடிசி பங்கினை விற்க வேண்டாம் என்பது பங்குச்சந்தை நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *