22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்தி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி IPO நிலை என்ன?

தூத்துக்குடியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த நிறுவனம் தனது பங்கு வெளியீட்டை நேற்று தொடங்கியது. நாளை வரை பங்குகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள முடியும்.

ஒரு பங்கின் விலை 500-525 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளில் 0.83 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன. வரும் 15ம் தேதி முதல் இந்த வங்கியின் பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும். மொத்தம் 1 கோடியே 58 லட்சம் ஈக்விட்டி பங்குகள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் 831 புள்ளி 6 கோடி ரூபாயை திரட்ட இந்த வங்கி திட்டமிட்டு உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வங்கியின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வங்கியின் நிதி நிலை நன்றாக இருப்பதால், நீண்ட கால முதலீட்டிற்கு இந்த பங்கு உகந்ததாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *