Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வேதாந்தா நிறுவனம் விளக்கம்…

இந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. ஆனால் புதிய அரைகடத்தி ஆலையை வேதாந்தா நிறுவனம் நேரடியாக நடத்தவில்லை என்றும், அதன் நிர்வாகம் மற்றும் முதலீடுகளை வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கவனிப்பதாகவும் வேதாந்தா விளக்கம் அளித்துள்ளது.

இதே போல் கடந்த பிப்ரவரி மாதமும் வேதாந்தா நிறுவனம் தனது விளக்கத்தை அளித்திருந்த்து. அதிலும் வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் முதலீடு தொடர்பானவற்றை கவனிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டாலும், அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பாக்ஸ்கான் நிறுவனத்துடனான கூட்டு நிறுவனத்தில் 60 விழுக்காடு

பங்கை வேதாந்தா நிறுவனம் வைத்திருக்கும் என்றும், 40 விழுக்காடு பாக்ஸ்கான் வைத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஒரே நிறுவனம் இருவேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் அண்மையில் மற்றொரு பேட்டியளித்துள்ளார். அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேதாந்தா நிறுவனம் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆலையை நிர்வகிப்பது வேதாந்தா நிறுவனமா இல்லை வேதாந்தா ரிசவ்சர்ஸ் நிறுவனமா , இல்லை யார் என்று அவர் அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *