Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இந்த விஷயத்துல இந்தியா கவனம் செலுத்தல..

இந்தியாவின் மக்கள் தொகை உயர்வு மிகப்பெரிய ரிஸ்காக மாறும் என்று இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோத்திலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாராயணமூர்த்தி,மக்கள் தொகை அதிகரிப்பு அலட்சியப் படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் எதிர்காலத்துக்கு பெரிய அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார். இந்தியாவின் தனிநபர் வருமானம், நில கையிருப்பு, சுகாதார வசதி ஆகியவற்றில் பெரிய சவால்கள் உள்ளதாக குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரேசில். சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவை அவர் ஒப்பிட்டார். அவசர நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியர்கள் மக்கள் தொகையைபற்றி அக்கறை கொள்ளவில்லை என்று சாடிய அவர், இதனால் இந்தியா தற்சார்பு இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசில், சீனாவில் நம்மை விட அதிக வருவாயும், நிலமும் மக்களிடம் இருப்பதாக அவர் ஒப்பிட்டார். ஏற்கனவே சீனா உலகின் தொழிற்சாலையாக விளங்கி வருவதாகவும் புகழ்ந்த அவர், நம்மைவிட சீனா 6 மடங்கு ஜிடிபிவைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். உற்பத்தி சார்ந்த துறைகளில் நாம் பின்தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் உற்பத்தியின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றும், அதனை ஊக்குவிப்பது அரசின் கைகளில்தான் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வெளிப்படைத்தன்மை, வேகம், ஆகியவை பொது நிர்வாகத்தில் இன்னும் மேம்படவேண்டும் என்றும் நாராயண மூர்த்தி குறிப்பிட்டார். ஒரு தலைமுறையே அடுத்த தலைமுறைக்காக தியாகம் செய்ய வேண்டியுள்ளதாக கூறிய அவர், தனது வளர்ச்சியில் தனது பெற்றோர், சகோதரர்கள், ஆசிரியர்களின் தியாகம் ஒளிந்திருப்பதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *