Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

ரூ.2லட்சம் கோடியை வங்கி அமைப்புக்குள் செலுத்தும் RBI

தற்போதைய பணப்புழக்கம் மற்றும் நிதி நிலைமைகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியான பணப்புழக்க நடவடிக்கைகளை அறிவித்தது. இதன் மூலம் வங்கி அமைப்புக்குள் 2,300 கோடி டாலருக்கும் அதிகமான (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) நிதி செலுத்தப்படும்.

நிதி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த, ரிசர்வ் வங்கி திறந்த சந்தை பத்திர கொள்முதல், அந்நியச் செலாவணி மாற்று ஒப்பந்தம் மற்றும் மாறும் விகித ரெப்போ செயல்பாடு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தும்.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆர்பிஐ ஜனவரி 30, 2026 அன்று ரூ. 25,000 கோடி மதிப்புள்ள 90 நாள் மாறும் விகித ரெப்போ (VRR) செயல்பாட்டை முன்னெடுக்கும். இது வங்கிகள் பிணைய ஈடுகளுக்கு எதிராக சந்தையால் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களில் நிதியைப் பெற அனுமதிக்கும்.

மேலும், ஆர்பிஐ பிப்ரவரி 4 அன்று மூன்று வருட கால அவகாசத்துடன் 1,000 கோடி டாலர் மதிப்புள்ள USD/INR வாங்குதல்/விற்றல் மாற்று ஏலத்தையும் நடத்தும். இந்த நடவடிக்கை, அந்நியச் செலாவணி சந்தை நிலைமைகளை சீராக்கும் அதே வேளையில், நீடித்த ரூபாய் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூடுதலாக, ரிசர்வ் வங்கி, பிப்ரவரி மாதம் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் மொத்தம் ரூ. 1,00,000 கோடி மதிப்புள்ள அரசுப் பத்திரங்களை வாங்கும் என்று கூறியுள்ளது.

பண வீக்க தரவுகளுக்கான திருத்தப்பட்ட தொடர், பிப்ரவரியில் பணவீக்க தரவுகள் வெளியானவுடன் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரி மாத நாணயக் கொள்கை மதிப்பாய்வில் ஆர்பிஐ அதன் பணவீக்கம் அல்லது வளர்ச்சி கணிப்புகளைத் திருத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஜனவரி மாதம் இதுவரை அமைப்பு ரீதியான பணப்புழக்கம் சராசரியாக ரூ. 59,356 கோடி உபரியாக இருந்துள்ளது. ஆர்பிஐ டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ரூ. 3 லட்சம் கோடி மதிப்புள்ள திறந்த சந்தை கொள்முதல்களை நடத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மொத்த திறந்த சந்தை கொள்முதல் ரூ. 5.20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பிப்ரவரி 2025 முதல் ஆர்பிஐ ஒட்டுமொத்தமாக ரெப்போ விகிதத்தை 125 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.25% ஆக நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *