வீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) விநியோகத்தை சீர்குலைத்துள்ள நிலையில், மார்ச் 12-13 தேதிகளில் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவித்த முதல் பெரிய IT நிறுவனங்களில் ஒன்றாக HCL Tech மாறியுள்ளது.
பிஸினஸ்லைனினால் சரிபார்க்கப்பட்ட ஒரு உள் அறிவிப்பில், அதன் சொந்த செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், அதன் சில உணவு விற்பனையாளர்கள் வணிக ரீதியான LPG பற்றாகுறையை அனுபவித்து வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சார அடுப்புகள் உட்பட மாற்று சமையல் ஏற்பாடுகளை செயல்படுத்தவும், தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக மைக்ரோவேவ்களில் மீண்டும் சூடுபடுத்தக்கூடிய, உறைந்த அல்லது முன் சமைத்த உணவுப் பொருட்களை வழங்கவும் HCL Tech, விற்பனையாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தடையற்ற LPG விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை செயல்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், வீட்டு இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் சுத்திகரிப்பு நிலையங்களை வழி நடத்தும் நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இது குறித்த பிஸினிஸ்லைனின் கேள்விகளுக்கு HCL Tech நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.
