எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லை
ஈரான் போரினால் தொழில்துறைக்கு எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது காரணமாக, அதன் உற்பத்தி மையங்களில், அதன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு எதுவும் ஏற்படவில்லை என்று பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
”சந்தை தேவையை பூர்த்தி செய்ய அதன் விநியோகச் சங்கிலி வலையமைப்பில் போதுமான அளவு செய்து முடிக்கப்பட்ட பொருட்கள் உள்ளன” என்று இந்த உணவு நிறுவனம், பங்கு சந்தை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
எல்பிஜி, பிஎன்ஜி, பயோமாஸ், திரவ எரிபொருள்கள் போன்ற பல்வேறு வகையான எரிபொருளை அதன் உற்பத்தி மையங்களில் பயன்படுத்துவதாகவும், இடையில் எரிபொருட்களை மாற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளது என்றும் அது மேலும் கூறியது.
”நிறுவனம் தொடர்ந்து செயல்பாடுகளை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில், சூழலில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை திறம்பட நிர்வகிப்பதில் நிறுவனம் முழு நம்பிக்கையுடன் உள்ளது. மேலும் SEBI (LODR) விதிமுறைகள், 2015 இன் கீழ், தேவைக்கேற்ப உரிய அறிக்கைகளை வெளியிடும்,” என்று அது தனது தாக்கல் அறிக்கையில் மேலும் கூறியது.
மேற்கு ஆசியாவில் மோதல்கள் காரணமாக தொழில்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொடர்ந்து எடுக்கும் என்றும் அது நம்பிக்கையுடன் கூறியது.
