Latest:
ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuationsஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuations
Latest:
ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuationsஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuations
உள்நாட்டு செய்திகள்

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு..!!

மத்திய அரசின் வர்த்தகத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, டிசம்பர் 2025-ல் இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை, முந்தைய டிசம்பரில் இருந்த $2,063 கோடியிலிருந்து கணிசமாக அதிகரித்து $2,504 கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 1.86 சதவீதம் அதிகரித்து $3,851 கோடியாக இருந்த போதிலும், இறக்குமதி 8.8 சதவீதம் என்ற அதிக விகிதத்தில் அதிகரித்து $6,355 கோடியாக இருந்தது இதற்குக் காரணம்.

ஆகஸ்ட் மாத இறுதியில் பெரும்பாலான இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 50 சதவீத வரியின் மத்தியில், டிசம்பர் 2025-ல் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 1.83 சதவீதம் குறைந்து $689 கோடியாக இருந்தது. “அமெரிக்காவில், இறக்குமதி வரி குறைவாக உள்ள துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதால், நாங்கள் இன்னும் நிலைத்து நிற்கிறோம். வரி அதிகமாக உள்ள இடங்களில், ஏற்றுமதியாளர்கள் அதிக மீள்திறனைக் காட்டி, விநியோகச் சங்கிலிகளைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்” என்று வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான முன்மொழியப்பட்ட இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) குறித்து பேசுகையில், பேச்சு வார்த்தைகள் மெய்நிகர் முறையில் நடைபெற்று வருவதாகவும், “மீதமுள்ள சிக்கல்களில்” உள்ள இடைவெளிகளைக் களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஏப்ரல்-டிசம்பர் 2025-26 காலகட்டத்தில், சரக்கு ஏற்றுமதி 2.44 சதவீதம் அதிகரித்து $33,029 கோடியாக இருந்தது. மின்னணுவியல், மருந்துகள், இறைச்சி மற்றும் பால் பொருட்கள், கடல்சார் பொருட்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் போன்ற துறைகளால் இந்த வளர்ச்சி உந்தப்பட்டதாக கூறினார்.

”இந்த நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் இருந்த $82,400 கோடியுடன் ஒப்பிடும்போது $85,000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

ஏப்ரல்-டிசம்பர் 2025-26 காலகட்டத்தில், அமெரிக்கா இந்தியாவின் முதன்மை ஏற்றுமதிச் சந்தையாகத் தொடர்ந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் $6,003 கோடியாகக இருந்த ஏற்றுமதி, இந்த காலகட்டத்தில் $6,588 கோடியாக இருந்தது. ஐக்கிய அரபு அமீரகம் $2,890 கோடி ஏற்றுமதியுடன் இரண்டாவது பெரிய இடமாக இருந்தது.

சீனா இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இருந்தது. ஏப்ரல்-டிசம்பர் 2025-26 காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து சீனாவிற்கான ஏற்றுமதி $1,425 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் $1,042 கோடியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *