Latest:
விநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவிநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்பு
Latest:
விநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவிநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்பு
உள்நாட்டு செய்திகள்

வேதாந்தாவின் அதிரடி அறிவிப்பு..!!

வேதாந்தா நிறுவனம் ஐந்து சுயாதீனமாகப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கப்படும் என வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் நேற்று அறிவித்தார். இதற்கான ஒப்புதலை செவ்வாய் அன்று தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) அளித்தது. இந்த திட்டம் மார்ச் 2026-க்குள் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனில் அகர்வால் தெரிவித்தார்.

பிரிவினைக்குப் பிறகு, வேதாந்தா நிறுவனம், அடிப்படை உலோகங்கள் வணிகத்தை நிர்வகிக்கும். அதே நேரத்தில் வேதாந்தா அலுமினியம், தல்வண்டி சபோ பவர், வேதாந்தா ஸ்டீல் அண்ட் அயர்ன் மற்றும் மால்கோ எனர்ஜி ஆகியவை தனித்தனி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகச் செயல்படும்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அகர்வால், ஒவ்வொரு வணிகத்தின் முழுமையான வளர்ச்சித் திறனையும் வெளிக்கொணர்வதற்கு இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று கூறினார். . ஒரு ஹோல்டிங் கட்டமைப்பு மூலம் நிறுவனர்கள் சுமார் 50 சதவீத பங்குகளை வைத்திருப்பார்கள் என்று அகர்வால் கூறினார்.

“வேதாந்தாவின் வணிகங்களான துத்தநாகம், வெள்ளி, அலுமினியம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், இரும்புத் தாது மற்றும் எஃகு ஆகியவற்றுக்கு அபரிமிதமான வலிமை உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இவற்றிற்கான தேவை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வணிகமும் தானாகவே வளர அனுமதிப்பதற்கு, இந்த நிறுவனப் பிரிவினை உதவும்” என்று கூறியுள்ளார்.

சமமாகப் பிரிப்பதற்குப் பதிலாக, வேதாந்தாவின் சுமார் ₹48,000 கோடி நிகரக் கடன், பிரிக்கப்பட்ட நிறுவனங்களின் பணப்புழக்கம் மற்றும் இருப்புநிலைக் கணக்கின் வலிமையின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்று கூறினார்.
கடன் சுமை குறித்த கவலைகளுக்குப் பதிலளித்த அகர்வால், குழுமத்தின் கடன் சுமை நிர்வகிக்கக்கூடிய அளவிலேயே இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.

“இது உலகளவில் மிகக் குறைந்த கடன் சுமை நிலைகளில் ஒன்றாகும். கடன் என்பது வணிகத்தின் ஒரு பகுதி, மேலும் எங்கள் நிலை குறித்து நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம்,” என்று அவர் கூறினார்.

சமீபத்தில், உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள சுமார் 700 டன்களிலிருந்து வெள்ளி உற்பத்தியை 3,000 டன்களாக அதிகரிக்கவும் இந்நிறுவனம் அதன் திட்டங்களை அறிவித்தது. துத்தநாகத்தை உருக்கிச் செம்மைப்படுத்தும் செயல்முறையிலிருந்து வெள்ளி ஒரு துணைப் பொருளாகப் பெறப்படுகிறது.

அலுமினியத் துறையில், சொந்தச் சுரங்கங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் இணைக்கப்பட்ட புதிய திட்டங்களின் ஆதரவுடன், உற்பத்தியை 30 லட்சம் டன்களிலிருந்து இரு மடங்காக அதிகரிக்கக் குழுமம் திட்டமிட்டுள்ளதாக அகர்வால் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *