22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
நிதித்துறை

கர்நாடகா வங்கி: கடன் – வைப்பு விகிதம் 80% ஆக உயரும்

கர்நாடகா வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ராகவேந்திர பட், மார்ச் 2027-க்குள் வங்கியின் கடன்-வைப்பு (CD) விகிதத்தை 80% ஆக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த விகிதம் 70 % க்கும் அதிகமாக உள்ளது. செவ்வாயன்று நடைபெற்ற 101-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், வங்கியின் கடன்-வைப்பு விகிதத்தை மேம்படுத்துவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார். இந்த நிதியாண்டிலேயே இந்த விகிதத்தை 75% ஆக உயர்த்துவதே உடனடி இலக்கு என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


கடன் – வைப்பு விகிதம் அதிகரிக்கும் போது, வட்டியிலிருந்து கிடைக்கும் வருமானம், நிகர வட்டி வரம்பு, சொத்துக்களின் மீதான வருவாய், பங்குகளின் மீதான வருவாய் போன்ற அனைத்து முக்கிய விகிதங்களும் மேம்படும் என்றும் அவர் கூறினார்.


கடன் வழங்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்காக, வங்கி தனது சில்லறை கடன் செயலாக்க மையங்களை RLPCகள் மீண்டும் தொடங்குகிறது.

முன்பு நான்கு பிராந்தியங்களில் மட்டுமே இருந்த இந்த மையங்கள், அவர் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பிறகு மேலும் மூன்று பிராந்தியங்களில் தொடங்கப்பட்டன. விரைவில், வங்கியின் அனைத்து 15 பிராந்தியங்களுக்கும் இந்த மையங்கள் விரிவுபடுத்தப்படும் என்று பட் தெரிவித்தார்.


மேலும், வங்கி தங்கக் கடன், சில்லறை, விவசாயம், குறு, சிறு, நடுத்தர தொழில் (MSME) ஆகிய துறைகளில் கடன் வழங்குவதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதே சமயம், நடப்புக் கணக்கு சேமிப்புக் கணக்கு அடிப்படையை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.


வாராக்கடன்கள் (NPA) கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவற்றை கண்காணிக்க தலைமை அலுவலகத்திலும், பிராந்திய அலுவலகங்களிலும் தனி குழுக்கள் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பத்தில் (IT) கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய முதலீடுகள் செய்யப்பட்டதாகவும், இது செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும், விதிமுறைகளுக்கு இணங்குவதற்கும் உதவியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த முதலீடுகளின் பலன்கள் இந்த ஆண்டு முதல் கிடைக்கத் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *