22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
தொழில்துறை

மும்பையில் டாடா பவர், டாடா மோட்டார்ஸ் இணைந்து பிரம்மாண்ட மின்சார வாகன சார்ஜிங் மையத்தை நிறுவியுள்ளன


டாடா குழுமத்தின் நிறுவனங்களான டாடா பவர் டாடா மோட்டார்ஸ் ஆகியவை இணைந்து, மும்பையில் அதிவேக மின்சார வாகன சார்ஜிங் மையத்தை அமைத்துள்ளன. இதுபோன்று இரு நிறுவனங்களும் இணைந்து நிறுவிய முதல் மையம் இதுவாகும்.

இதைத் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் இது போன்ற மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மும்பையின் அந்தேரி புறநகர் பகுதியில், லீலா ஹோட்டல் வளாகத்தில் உள்ள இந்த சார்ஜிங் மையத்தில், ஒரே நேரத்தில் 16 வாகனங்களுக்கு 120 கிலோவாட் வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும். இது இந்தியாவின் மிகப்பெரிய சார்ஜிங் மையமாகப் பார்க்கப்படுகிறது.


“நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான எங்களின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதி இது,” என டாடா பவர் நிறுவனத்தின் CEO பிரவீர் சின்ஹா தெரிவித்தார்.
இதேபோன்ற சார்ஜிங் மையங்கள் டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.

டாடா மின்சார வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்களில் 25% வரை தள்ளுபடி முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த சார்ஜிங் மையத்தை டாடா வாகனங்கள் மட்டுமின்றி, மற்ற மின்சார வாகனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சூரிய ஒளி, காற்று மின்சாரம் கலப்பு ஆற்றல் மூலம் இயங்கும்.


தற்போது, டாடா மோட்டார்ஸ் நாடு முழுவதும் பெரிய சார்ஜிங் மையங்களை ஏற்கனவே கொண்டுள்ளது. டாடா பவர் மும்பையில் 1,000 க்கும் மேற்பட்ட பசுமை சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.


மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களுடனும் இது போன்ற ஒத்துழைப்புக்கு டாடா பவர் தயாராக இருப்பதாக சின்ஹா கூறினார். எதிர்காலத்தில் லாரிகள் பேருந்துகளுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பும் உருவாக்கப்படும்.


டாடா பவரின் தற்போதைய சொத்துக்கள் மின்சாரம் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும். புதிய சொத்துக்களும் உருவாக்கப்படும் எனவும் சின்ஹா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *