22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ரயில் பயணிகள் கவனத்திற்கு!!!

3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள், அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பொருளாதார வகுப்புகளில் 3வது பிரிவு ஏசி வகுப்புகளில் பயணித்தவர்களுக்கு ஒரு தலையணை, படுக்கை விரிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இடையில் இந்த வசதிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சூழலில் தற்போது அவை மீண்டும் இந்த வாரத்தில் இருந்து வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் பயணிப்பவர்களுக்கு படுக்கை விரிப்புகள் அளிக்கப்படாமல் உள்ளது. மேலும் 81,82,83 பெர்த்களில் புக் செய்திருந்தவர்களுக்கு பதிலாக வேறு இருக்கை, படுக்கைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் குறிப்பிட்ட இந்த 3 பெர்த்களில் லின்ன்களை ரயில்வே வைத்து வந்தது. ஆனால் அந்த விதி வரும்நாட்களில் மாற்றப்பட உள்ளது

ரயிலில் செல்லும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் அளிக்கப்படாவிட்டால் 20 ரூபாய் கட்டணத்தை ரயில்வே திரும்ப அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படுக்கை விரிப்புகள் அளிக்கப்படாவிட்டால் 20 மணி நேரத்துக்குள் தெரிவித்தால் மட்டுமே 20 ரூபாய் திரும்ப அளிக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *