22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பணவீக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் மத்திய வங்கிகள் சிறப்பாக செயல்படும்: ரகுராம் ராஜன்!!!

மத்திய வங்கிகள், பணவியல் கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தால், பணவீக்கத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று அமெரிக்காவின் வயோமிங்கில் நடைபெற்ற மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.

ரகுராமைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளில் மத்திய வங்கிகளால் அதிகம் செய்ய முடியாது. மாறாக, நேரடிக் கொள்கைகள் இத்தகைய சிக்கல்களை மிகச் சிறந்த முறையில் கையாள முடியும்.

அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான பணவியல் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக கடன் வாங்கும் செலவுகளை உயர்த்தியுள்ளனர். இதன்காரணமாக பணவீக்கத்தின் பாதையை யூகிப்பதில் கொள்கை வகுப்பாளர்கள் தவறாக முடிவு எடுத்ததாக கருதப்படுகிறது. விகிதங்கள் மீதான மோசமான கண்ணோட்டம் மந்தநிலை பற்றிய அச்சத்தை தூண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *