Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பணத்தை எடுத்துச்சென்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..

அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் பெரும்பாலானவற்றை வெளியே எடுத்துள்ளனர். கடந்த 17 ஆம் தேதி வரை இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 70 ஆயிரத்து 398 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். செப்டம்பரில் 57ஆயிரத்து 724 கோடி ரூபாய் முதலீடுகள் வந்து குவிந்த நிலையில் அடுத்த மாதமே முதலீடுகள் காணாமல் போயுள்ளன. சீனாவில் பொருளாதார மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது உள்ளிட்ட காரணிகளால் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் ஈக்விட்டி பங்குகள் அதிக மதிப்பு கொண்டவையாக இருப்பதாலும், மத்திய கிழக்கு நாடுகளில் சண்டை நடப்பதாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்தை செய்திருக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்ததால் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல் துறை மற்றும் நிதிசேவைகள் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நிதி சேவை நிறுவனங்களில் 23,283 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வெளியே சென்றுள்ளது. கடந்த மாதம் 27,200 கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் வெளியே சென்ற முதலீட்டு அளவு 12,371 கோடி ரூபாயாகவும், ஆட்டோமொபைல் துறை பங்குகளின் மீதான முதலீடுகள் அக்டோபரில் 8131 கோடி ரூபாயாகவும் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *