Latest:
இறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிகரிப்புஇந்திய பொருளாதார  நெருக்கடியும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்பும்India's Gold Dilemma and Economic Tightrope Amid Global Instability: PM Modi's Austerity Call in Contextடாடா மோட்டார்ஸின் காலாண்டு லாபம் 35% அதிகரிப்புஅமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபைசீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த சீனா சென்றுள்ள டிரம்ப்இறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிகரிப்புஇந்திய பொருளாதார  நெருக்கடியும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்பும்India's Gold Dilemma and Economic Tightrope Amid Global Instability: PM Modi's Austerity Call in Contextடாடா மோட்டார்ஸின் காலாண்டு லாபம் 35% அதிகரிப்புஅமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபைசீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த சீனா சென்றுள்ள டிரம்ப்
Latest:
இறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிகரிப்புஇந்திய பொருளாதார  நெருக்கடியும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்பும்India's Gold Dilemma and Economic Tightrope Amid Global Instability: PM Modi's Austerity Call in Contextடாடா மோட்டார்ஸின் காலாண்டு லாபம் 35% அதிகரிப்புஅமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபைசீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த சீனா சென்றுள்ள டிரம்ப்இறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிகரிப்புஇந்திய பொருளாதார  நெருக்கடியும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்பும்India's Gold Dilemma and Economic Tightrope Amid Global Instability: PM Modi's Austerity Call in Contextடாடா மோட்டார்ஸின் காலாண்டு லாபம் 35% அதிகரிப்புஅமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபைசீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த சீனா சென்றுள்ள டிரம்ப்
செய்தி

சில்லறை முதலீட்டாளர்களுக்கு பழைய பாடமேதான்..

புதிய நிதியாண்டு பிறக்கப்போகிறது. இதில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு பழைய பாடத்தைத் தான் பங்குச்சந்தைகள் கற்றுத்தருகின்றன. நிஃப்டி 500 டோட்டல் ரிட்டன் குறியீட்டின்படி, கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை, தற்போது 11.3 விழுக்காடு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் இந்திய பங்குச்சந்தைகளில் 11 விழுக்காடு சரிவை கண்டுள்ளன. இதில் பெரும்பாலானவை பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பங்குகள் என்கிறது பகுப்பாய்வு. நிஃப்டி பொதுத்துறை பங்குகளின் டோட்டல் ரிட்டன்ஸ் குறியீட்டின்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 5 முறை விழுந்த சந்தைகள் தற்போது 20 விழுக்காடு சரிவை கண்டுள்ளன. இந்த சந்தைகள் மீண்டு வரவேண்டுமெனில் 25 விழுக்காடு ஏற்றம் தேவைப்படுகிறது. நிஃப்டி இந்தியா ரயில்வே துறை பங்குகளில் 14 நிறுவன பங்குகள் கடந்த ஜூலை முதல் தற்போது வரை 26 விழுக்காடு சரிவை கண்டுள்ளன. 35 விழுக்காடு அளவுக்கு லாபத்தை அந்த நிறுவனங்கள் இழந்துள்ளன. இதேபோல் டிஃபென்ஸ் எனப்படும் பாதுகாப்புப்பிரிவு பங்குகளில் 16 நிறுவன பங்குகள் கடந்த ஜூலை 11 ஆம் தேதியில் இருந்து தற்போது 23 % சரிவை கண்டுள்ளன. இந்த சரிவுகள் கற்றுத்தரும் பாடங்கள் யாதெனில், நிறுவனங்களின் பழைய அளவிலான செயல்பாடு வருங்காலத்திலும் இருக்கும் என கூறமுடியாது. சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பல நிறுவனங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளதுபோதும், அவர்களுக்கு சரிவு மட்டுமே மிஞ்சுகிறது. இது முதல்முறை இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பரஸ்பர நிதியிலும் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றனர். மோட்டிலால் ஆஸ்வால் நிஃப்டி நிறுவன பங்குகள் 1,676 கோடி ரூபாய் நிதியை திரட்டியபோதும், அந்நிறுவனம் 9 விழுக்காடு சரிவை ஒரு மாதத்திலும், 20.6 விழுக்காடு சரிவை 6 மாதங்களிலும் கண்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றுவரும் அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபன்ட்ஸ் துறையில் பெரிய முதலீடுகளும் கிடைத்தன. குறிப்பாக கடந்த டிசம்பரில் மட்டும் 41,156 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அடுத்தவர் பணத்தை வைத்து முதலீடு செய்யும் ஓபிஎம்கள் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் இது சில்லறை முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *